முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தமிழக அரசு தயாராக இல்லை : அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேட்டி

சனிக்கிழமை, 23 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தமிழக அரசு தயாராக இல்லை என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,பருப்பு,கோதுமை மற்றும் காய்கறி தொகுப்பினை தொடர்ந்து 2 - மாதங்களாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீர் மற்றும் நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது வெளிப்பகுதியில் இருந்து வரும் நபர்களுக்குதான் கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் திறம்பட பணியாற்றி கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது. இதற்கு மக்கள் அனைவரும் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும்.மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க பரிசோதனைகளை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி. விவசாயிகளின் துயரம் அறிந்தவர். எனவே இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்காது.விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை. இப்படி இருக்கும்போது காங்கிரஸ் போராட்டம் என்பது அவர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டி கொள்ளத்தான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்? மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்? ஒன்றும் செய்யவில்லை. இது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில மாணவரணி இணை செயலாளர் பி.குமார், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சோலைராஜா பகுதி செயலாளர் பைக்காரா கருப்பசாமி, முத்துவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து