முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டாலும், ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளில், அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம் (16.20 லட்சம் பேர்). அதேபோல், பலி எண்ணிக்கையும் (96,364 பேர்) இந்நாட்டில்தான் அதிகம். அங்கு தாமதமாகத்தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும்கூட இதற்கு மக்கள் மற்றும் பெருநிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்த ஊரடங்கால், பல்வேறு நாடுகளை போன்று அமெரிக்காவிலும் பெரருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழந்தோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் அதிபர் டிரம்ப் உடனடியாக பொருளாதாரத்ைத மீட்டெடுக்க, ஊரடங்கு உத்தரவில் பல்வேறு சலுகைகளை அறிவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது மிக மெதுவாக பாதிப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது. எனினும், அந்நாட்டில் இரண்டாவது முறையாக கொரோனா பெரிய அளவில் தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.

பொருளாதார திறப்பு நடவடிக்கை காரணமாக, இரண்டாவது அலை வீசக் கூடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், கொரோனாவின் இரண்டாவது அலை வந்தாலும், நாட்டை இனி முடக்கப் போவது கிடையாது.. நாடு ஒன்றும் மூடி போட்டு மூடுவதற்கான பொருள் இல்லை. இது ஒரு ஆரோக்கியமான விஷயமும் கிடையாது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து