எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க . எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் விசாரணையில் கூறியது தெரியவந்ததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அளித்த செய்தி குறிப்பு வருமாறு:-
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம் வழங்க, முதல்வரால் உத்தரவிடப்பட்டு, இதற்காக ரூ. 2014.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்க உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் முடிய AAY மற்றும் முன்னுரிமை (PHH) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டது. எனினும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னுரிமை அல்லாத (NPHH) குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்காக முதல்வரால் உத்தரவிடப்பட்டு 438.00 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 655.63 கோடி ரூபாய் செலவில் வழங்குவதற்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லாமல் ரேசன் பொருள் வழங்கியது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான்.
மேற்கண்டவாறு ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையாக ரூ. 1000/- வீதம் வழங்குவதற்கும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும் வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தைக் காட்டிலும் கூடுதலாக 3,108.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்தில் நாளது தேதி வரை 90.77 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 2,92,912 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நியாய விலைக் கடை பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப் பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களுக்கும் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள ஆணையிட்டுள்ளது. இப்படி நாங்கள் குடும்பம் குடும்பமாக ஏழைகளை தேடி பொருள் வழங்குகிறோம்.
மேலும், கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்கள் என 22,76,936 தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் மற்றும் குடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு மொத்தம் 144 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கிய மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தைச் சேர்ந்த 25,98,000 உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 2 மாதங்களுக்கு ரொக்க உதவித் தொகை வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்கள் மூலமும், சமுதாய உணவுக் கூடங்கள் மூலமும், ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் வகையில் உணவு வழங்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் எந்தவொரு நபருக்கும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்நிலையில், கடந்த 13.05.2020 அன்று டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் 4 பேர் தலைமைச் செயலளாரை சந்தித்து, திராவிட முன்னேற்ற கழகத் தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் பல லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 15 லட்சம் பேருக்கு உணவு, உடை உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி விட்டதாகவும், மீதமுள்ள ஒரு லட்சம் மனுக்களை எங்களால் செய்ய முடியாதவை, அரசு மட்டுமே செய்யக்கூடிய கோரிக்கைகளான சிறு, குறு தொழில் நிறுவனங்களை திறக்க வேண்டும், போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுக்கள் மட்டுமே உள்ளன. இதனை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். மேற்கண்ட தி.மு.க மக்களவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 98,752. மேற்கண்ட மனுக்கள் அனைத்தையும் தலைமைச் செயலாளர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்து விட்டார். மேற்கண்ட மனுக்களை ஆய்வு செய்த போது 98,752 மனுக்களில் ஒரு மனு கூட இவர்கள் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளான, MSME மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஒரு கோரிக்கை கூட இடம்பெறவில்லை, அனைத்து மனுக்களிலும் Dry Ration என்ற உணவுப் பொருள் சம்மந்தப்பட்டதாக இருந்து உள்ளது. எனவே, அந்த மனுக்களை அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறையான உணவு மற்றும் கூட்டுறவு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிப்பவர்களிடம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், அரசால் வழங்கப்பட்ட ரொக்க உதவித் தொகை, விலையில்லா அரிசி, கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அனைத்தையும் தாங்கள் பெற்றுக் கொண்டு விட்டதாகத்தான் தெரிவித்துள்ளார்கள். மேலும், சிலர் தங்களுக்கு தி.மு.க உதவிகள் செய்து கொடுப்பதாகக் கூறி மனுக்களில் கையொப்பம் பெற்றும், அலைபேசி மூலம் தகவல் பதிவு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டதால், இதைபோல் நாங்கள் மனுக்கள் அளித்ததாகவும், ஆனால் இதுவரை தி.மு.க ஒன்றிணைவோம் திட்டத்தின்கீழ் எங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கக்கூடிய அரசிடமே மனுக்களை அளித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட வகைகளில் எல்லாம் மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த உண்மையை திசை திருப்பும் வகையில் டி.ஆர். பாலு தலைமையிலான எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர், மக்களிடம் அம்மாவின் அரசு பெற்றுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் தவறான செய்திகளை மக்களிடையே பரப்ப முயற்சிக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. எனவே, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின், அம்மாவின் நல்லாசியோடு முதல்வரின் உறுதியான தொடர் நடவடிக்கைகளின் மூலமாக, மக்களுடைய அன்றாட தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் இதுபோன்ற மலிவான அரசியல் மக்களிடம் எடுபடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இந்திய வீராங்கனை விலகல்
17 Sep 2025ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.