எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க . எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் விசாரணையில் கூறியது தெரியவந்ததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அளித்த செய்தி குறிப்பு வருமாறு:-
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம் வழங்க, முதல்வரால் உத்தரவிடப்பட்டு, இதற்காக ரூ. 2014.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்க உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் முடிய AAY மற்றும் முன்னுரிமை (PHH) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டது. எனினும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னுரிமை அல்லாத (NPHH) குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்காக முதல்வரால் உத்தரவிடப்பட்டு 438.00 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 655.63 கோடி ரூபாய் செலவில் வழங்குவதற்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லாமல் ரேசன் பொருள் வழங்கியது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான்.
மேற்கண்டவாறு ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையாக ரூ. 1000/- வீதம் வழங்குவதற்கும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும் வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தைக் காட்டிலும் கூடுதலாக 3,108.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்தில் நாளது தேதி வரை 90.77 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 2,92,912 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நியாய விலைக் கடை பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப் பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களுக்கும் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள ஆணையிட்டுள்ளது. இப்படி நாங்கள் குடும்பம் குடும்பமாக ஏழைகளை தேடி பொருள் வழங்குகிறோம்.
மேலும், கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்கள் என 22,76,936 தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் மற்றும் குடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு மொத்தம் 144 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கிய மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தைச் சேர்ந்த 25,98,000 உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 2 மாதங்களுக்கு ரொக்க உதவித் தொகை வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்கள் மூலமும், சமுதாய உணவுக் கூடங்கள் மூலமும், ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் வகையில் உணவு வழங்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் எந்தவொரு நபருக்கும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்நிலையில், கடந்த 13.05.2020 அன்று டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் 4 பேர் தலைமைச் செயலளாரை சந்தித்து, திராவிட முன்னேற்ற கழகத் தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் பல லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 15 லட்சம் பேருக்கு உணவு, உடை உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி விட்டதாகவும், மீதமுள்ள ஒரு லட்சம் மனுக்களை எங்களால் செய்ய முடியாதவை, அரசு மட்டுமே செய்யக்கூடிய கோரிக்கைகளான சிறு, குறு தொழில் நிறுவனங்களை திறக்க வேண்டும், போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுக்கள் மட்டுமே உள்ளன. இதனை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். மேற்கண்ட தி.மு.க மக்களவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 98,752. மேற்கண்ட மனுக்கள் அனைத்தையும் தலைமைச் செயலாளர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்து விட்டார். மேற்கண்ட மனுக்களை ஆய்வு செய்த போது 98,752 மனுக்களில் ஒரு மனு கூட இவர்கள் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளான, MSME மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஒரு கோரிக்கை கூட இடம்பெறவில்லை, அனைத்து மனுக்களிலும் Dry Ration என்ற உணவுப் பொருள் சம்மந்தப்பட்டதாக இருந்து உள்ளது. எனவே, அந்த மனுக்களை அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறையான உணவு மற்றும் கூட்டுறவு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிப்பவர்களிடம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், அரசால் வழங்கப்பட்ட ரொக்க உதவித் தொகை, விலையில்லா அரிசி, கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அனைத்தையும் தாங்கள் பெற்றுக் கொண்டு விட்டதாகத்தான் தெரிவித்துள்ளார்கள். மேலும், சிலர் தங்களுக்கு தி.மு.க உதவிகள் செய்து கொடுப்பதாகக் கூறி மனுக்களில் கையொப்பம் பெற்றும், அலைபேசி மூலம் தகவல் பதிவு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டதால், இதைபோல் நாங்கள் மனுக்கள் அளித்ததாகவும், ஆனால் இதுவரை தி.மு.க ஒன்றிணைவோம் திட்டத்தின்கீழ் எங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கக்கூடிய அரசிடமே மனுக்களை அளித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட வகைகளில் எல்லாம் மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த உண்மையை திசை திருப்பும் வகையில் டி.ஆர். பாலு தலைமையிலான எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர், மக்களிடம் அம்மாவின் அரசு பெற்றுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் தவறான செய்திகளை மக்களிடையே பரப்ப முயற்சிக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. எனவே, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின், அம்மாவின் நல்லாசியோடு முதல்வரின் உறுதியான தொடர் நடவடிக்கைகளின் மூலமாக, மக்களுடைய அன்றாட தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் இதுபோன்ற மலிவான அரசியல் மக்களிடம் எடுபடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
22 Oct 2025திருச்சி : காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Oct 2025சென்னை : அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.