முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க. எந்த உதவியும் செய்யவில்லை: விசாரணையில் மக்கள் தகவல்: அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 28 மே 2020      தமிழகம்
Image Unavailable

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க . எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் விசாரணையில் கூறியது தெரியவந்ததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அளித்த செய்தி குறிப்பு வருமாறு:-

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை  கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம்  வழங்க, முதல்வரால் உத்தரவிடப்பட்டு,   இதற்காக  ரூ. 2014.70 கோடி  ஒதுக்கீடு   செய்யப்பட்டது.     இதில் 98.85  சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு  இந்த  ரொக்க  உதவித்   தொகை  வழங்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் முதல் ஜூன்  முடிய AAY மற்றும் முன்னுரிமை (PHH) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டது.  எனினும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில்  முன்னுரிமை அல்லாத (NPHH) குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் முதல் ஜூன்  முடிய 3 மாதங்களுக்கு நபர் ஒன்றுக்கு  கூடுதலாக  5 கிலோ  அரிசி  வழங்குவதற்காக  முதல்வரால் உத்தரவிடப்பட்டு   438.00  கோடி  ரூபாய்  ஒதுக்கீடு  செய்யப்பட்டு,    3 நபர்களுக்கு  மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி  இரு மடங்காக   உயர்த்தி  வழங்கப்பட்டு  வருகிறது.   மேலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து 2.08 கோடி குடும்ப  அட்டைதாரர்களுக்கும்  விலையில்லா  சர்க்கரை,  பருப்பு  மற்றும்  சமையல் எண்ணெய் ஆகியவற்றை 655.63 கோடி ரூபாய் செலவில் வழங்குவதற்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.  இதுபோன்று  அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லாமல்  ரேசன்  பொருள்  வழங்கியது  இந்தியாவில்  தமிழ்நாட்டில்    மட்டும்தான்.

மேற்கண்டவாறு  ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையாக ரூ. 1000/- வீதம் வழங்குவதற்கும், ஏப்ரல்  முதல்  ஜூன்  மாதம் முடிய  அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும்  விலையில்லா  கூடுதல்  அரிசி,  சர்க்கரை,   பருப்பு  மற்றும்    சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும் வழக்கமாக வழங்கப்படும் உணவு  மானியத்தைக் காட்டிலும் கூடுதலாக 3,108.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30 சதவீத  குடும்ப அட்டைதாரர்களுக்கும்  மே மாதத்தில்  நாளது தேதி  வரை 90.77 சதவீத   குடும்ப அட்டைதாரர்களுக்கும்   வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 2,92,912 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நியாய விலைக் கடை பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட  நபர்களின்  வீடுகளுக்குச்  சென்று  வழங்கப்பட்டுள்ளது.  மேலும்,  கடந்த  அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய   குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப் பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களுக்கும் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்  கொள்ள ஆணையிட்டுள்ளது.  இப்படி  நாங்கள்  குடும்பம்  குடும்பமாக  ஏழைகளை  தேடி   பொருள் வழங்குகிறோம். 
 
மேலும், கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள்,    ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்கள் என 22,76,936 தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர்   சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய  தொகுப்பும்  மற்றும்  குடும்ப  அட்டை  இல்லாத    4,022  திருநங்கைகளுக்கு  12  கிலோ அரிசி,  ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய  தொகுப்பும் வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு மொத்தம்  144 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது.  இப்படி வழங்கிய  மாநிலம்  இந்தியாவில்  தமிழ்நாடு  மட்டும்தான்.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தைச் சேர்ந்த 25,98,000 உறுப்பினர்களுக்கு  மாதம் ஒன்றுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 2 மாதங்களுக்கு ரொக்க உதவித் தொகை  வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.   மேலும், அம்மா உணவகங்கள் மூலமும், சமுதாய உணவுக் கூடங்கள் மூலமும்,  ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் வகையில் உணவு வழங்கப்பட்டு வருவதால்,  தமிழகத்தில்  எந்தவொரு  நபருக்கும்  உணவுப்  பற்றாக்குறை  என்ற  பேச்சுக்கே  இடமில்லை. 

இந்நிலையில், கடந்த 13.05.2020 அன்று  டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் 4 பேர் தலைமைச் செயலளாரை சந்தித்து, திராவிட  முன்னேற்ற  கழகத்  தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் பல லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாகவும்,   அதில் 15  லட்சம் பேருக்கு  உணவு,  உடை  உள்ளிட்ட  தேவைகளை  நிறைவேற்றி விட்டதாகவும், மீதமுள்ள ஒரு லட்சம் மனுக்களை எங்களால் செய்ய முடியாதவை, அரசு மட்டுமே செய்யக்கூடிய கோரிக்கைகளான   சிறு,  குறு  தொழில்  நிறுவனங்களை  திறக்க  வேண்டும்,   போக்குவரத்து வசதி  ஏற்படுத்தி  தர  வேண்டும்   என்ற  கோரிக்கை  அடங்கிய  மனுக்கள்  மட்டுமே  உள்ளன.  இதனை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.  மேற்கண்ட தி.மு.க மக்களவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 98,752. மேற்கண்ட மனுக்கள் அனைத்தையும் தலைமைச் செயலாளர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்து விட்டார்.   மேற்கண்ட மனுக்களை ஆய்வு செய்த போது 98,752 மனுக்களில் ஒரு மனு கூட இவர்கள் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளான, MSME மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஒரு கோரிக்கை கூட இடம்பெறவில்லை, அனைத்து மனுக்களிலும்  Dry Ration  என்ற உணவுப் பொருள் சம்மந்தப்பட்டதாக  இருந்து உள்ளது.  எனவே, அந்த மனுக்களை அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறையான உணவு மற்றும் கூட்டுறவு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அதன் பேரில்  மனுவில்  குறிப்பிட்ட  முகவரியில் வசிப்பவர்களிடம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தியதில்,  அரசால் வழங்கப்பட்ட  ரொக்க  உதவித்  தொகை,  விலையில்லா அரிசி, கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அனைத்தையும் தாங்கள் பெற்றுக் கொண்டு விட்டதாகத்தான்  தெரிவித்துள்ளார்கள்.  மேலும், சிலர் தங்களுக்கு தி.மு.க உதவிகள் செய்து கொடுப்பதாகக் கூறி  மனுக்களில் கையொப்பம்  பெற்றும்,  அலைபேசி  மூலம் தகவல் பதிவு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டதால், இதைபோல்  நாங்கள் மனுக்கள் அளித்ததாகவும்,  ஆனால் இதுவரை தி.மு.க ஒன்றிணைவோம்  திட்டத்தின்கீழ்  எங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், எங்களுக்கு உதவி  செய்து  கொண்டு  இருக்கக்கூடிய  அரசிடமே  மனுக்களை  அளித்துள்ளார்கள் என்பதை  தெரிவித்துள்ளார்கள்.  

மேற்கண்ட வகைகளில் எல்லாம் மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த உண்மையை திசை திருப்பும் வகையில் டி.ஆர். பாலு தலைமையிலான  எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர், மக்களிடம் அம்மாவின்  அரசு பெற்றுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த   வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் தவறான செய்திகளை மக்களிடையே    பரப்ப    முயற்சிக்கிறார்கள்    என்பது    ஊர்ஜிதமாகிறது.  எனவே, கொரோனா  நோய்த்  தடுப்பு  நடவடிக்கைகளின்,  அம்மாவின் நல்லாசியோடு முதல்வரின் உறுதியான தொடர் நடவடிக்கைகளின் மூலமாக, மக்களுடைய அன்றாட தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள  முடியாத  தி.மு.க.வின்  இதுபோன்ற  மலிவான அரசியல் மக்களிடம்  எடுபடாது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து