முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. மழைக்கால கூட்டத் தொடர் குறித்து துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா இருவரும் ஆலோசனை நடத்தினர். 

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை எப்போது நடத்துவது? எப்படி நடத்துவது? என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா இருவரும் ஆலோசனை நடத்தினர். வழக்கமான நடைமுறையில் கூட்டத் தொடரை நடத்த முடியாது என்பதால்  பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை கூட்டத்தை நடத்த ஆலோசிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.

பாராளுமன்ற மைய மண்டபத்தில் சுமார் 800 பேர் அமர இட வசதி உள்ளது. எனவே சமூக இடைவெளியை கடைப்பிடித்து மைய மண்டபத்தில் கூட்டத்தை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.  மேலும் குறைந்த எண்ணிக்கையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் கூட்டத்தை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து