முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 3 ரயில்களை இயக்க அனுமதி ரயில்வே துறைக்கு அரசு கோரிக்கை கடிதம்

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

தமிழகத்திற்கு திருச்சி - செங்கல்பட்டு இடையே அரியலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சை, மாயவரம், விழுப்புரம் வழியாகவும், அரக்கோணம் - கோவை இடையே காட்பாடி, சேலம் வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்கவும், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு ஒப்புதல் பெற கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை உள்ளிட்ட 4 வழி தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 3 வழிதடங்களில் விரைவில் ரயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து