முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹூரியத் மாநாட்டு கட்சியிலிருந்து காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலிஷா கிலானி விலகல்

திங்கட்கிழமை, 29 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானி ஹூரியத் மாநாட்டு கட்சியில் இருந்து விலகினார்.

காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கைகளை கொண்ட பிரிவினைவாதிகளில் மிகவும் முக்கியமானவர் சையது அலிஷா கிலானி. இவர் அனைத்து ஹூரியத் மாநாட்டு கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார். காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமைப்பாக இந்த ஹூரியத் மாநாட்டு கட்சி இருந்து வந்தது.  

இதற்கிடையில், காஷ்மீருக்கு வழங்கி வந்த 370 சிறப்பு சட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதன் மூலம் காஷ்மீர் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.  இந்த நடவடிக்கை பிரிவினைவாத அமைப்புகளுக்கு பெருத்த அடியாக அமைந்தது.

மேலும், கிலானி உள்பட பிரிவினைவாத தலைவர்கள் அனைவரும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்.  சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஹூரியத் பிரிவினைவாத அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் வெகுவாக குறைந்தது.  இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும் ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவரான சையது அலிஷா கிலானி தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

தனது விலகலை அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத தலைவர் ஹூரியத் அமைப்பில் இருந்து விலகியுள்ளதால் காஷ்மீரில் மேலும் அமைதி திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து