எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுவதாக ஐ.சி.எம்.ஆர். விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு விலங்குகள், மனிதர்களிடம் பரிசோதனை நடத்த இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் பரிசோதனைகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. கொரோனா தொற்றுக்கு விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதை விட அதன் பாதுகாப்பை உறுதி செய்வது, மருந்தின் தரம், தடுப்பு மருந்துக்கான அனைத்தும் தடுப்பு மருந்தில் இருப்பதில் உறுதி செய்வது போன்றவையும் மிக முக்கியம். விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க இதற்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டது.
இதில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் இந்தியா நிறுவனத்துடன் ஐ.சி.எம்.ஆர். தேசிய நுண்மியியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியது. இந்த தடுப்பு மருந்துக்கு கோவேக்ஸின் என பெயரிடப்பட்டுள்ளது. இதை ஆராய்ந்த மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மனிதர்களுக்கான மருத்துவ சோதனைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாடு முழுக்க 12 மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மருத்துவ சோதனை தளமாக தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க மிக அவசரம் காட்டி வரும் நிலையில் ஐ.சி.எம்.ஆர். சர்வதேச விதிகளுக்குட்பட்டே கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்து பரிசோதனைகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆய்வக சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் மனிதர்களுக்கு மருந்தை உள்செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதில் சிவப்பு நாடா முறையை ஒழித்து விட்டு மிக முக்கியமாக செய்ய வேண்டிய நடைமுறைகள் எதையும் தவிர்த்து விடாமல் பரிசோதனையில் பங்கேற்கும் நபர்களை தேர்வு செய்வதை விரைந்து நடத்த ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. மேலும் ஐ.சி.எம்.ஆர். மற்ற எதையும் விட கொரோனா சிகிச்சையில் பாதுகாப்பு, இந்திய மக்களின் நலன் ஆகியவைதான் அதிக முக்கியத்துவம் தரும் விஷயங்களாக எடுத்து கொண்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


