முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் நேற்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,494 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,371 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் டெல்லி முழுவதும் 2,276 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது டெல்லியில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,968 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 19,155 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து