எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இணை நோயாளிகள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை - எண்ணூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர மநாகராட்சி மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதி மக்களுக்கு இணை நோயாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. எண்ணூரில் நேற்று காமராஜர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணை நோயாளிகள் மருத்தவ சிறப்பு பரிசோதனை முகாமில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜானிடாம்வர்கீஸ், மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்;.ஏ.,கே.குப்பன், மண்டல அலுவலர் பால்தங்கதுரை, டிஸ்பி.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பார்வையிட்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது: திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், யூரியா, இருதய நோய், ஆக்ஸிஜன் சொரிவு, யூரியா கிரியேட்டின், கருப்பை மற்றும் வாய்ப்புற்று நோய் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 15,724 பேர் இணை நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் இணை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படின் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு முகாம் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஒரு வாரமாக சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று எண்ணிக்கை குறைவாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. மற்ற மாநிலங்கனை காட்டிலும் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டு அவர்களின் ஆலோசனைகளோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் காய்ச்சல் முகாம் போன்று இணை நோய் சிறப்பு மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மண்டலம் சுமார் 3.50 லட்சம் மக்கள் தொகை கொண்டது.
இங்கு உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைத்து இணை நோய் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது ஊரடங்கின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது.
ஜூலை 31 வரை பொதுபோக்குவரத்து தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரம் வாழ தகுதி இல்லாத நகரம் என்று கூறப்பட்ட நிலையில் இப்பொழுது முதல்வர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான வீடுவீடாக சென்று காய்ச்சல், ஆக்ஸிஜன் பரிசோதனை போன்றவற்றால் தொற்று ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணமாக்கப்படுகிறது.
தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தனது அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் 100 சதவீதம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்து விடலாம். தொழிலாளர்கள் தங்கள் ஊரிலிருந்து தாங்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலைக்கு பணிக்கும் செல்லும் இ-பாஸ் தொடர்பான பிரச்சினைக்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
முடிவில் திருவொற்றியூர் சங்கராச்சாரியார் காலனியில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் புரோகிதர்கள், ஏழை எளிய பிராமண சமூதாயத்தை சார்ந்த 100 குடும்பங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் தலா ஐந்து கிலோ அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அருகில் அதிமுக நிர்வாகிகள் கே.கார்த்திக், இ.வேலாயுதம், ஜி.ரவிக்குமார், புதுகை பாண்டியன், எஸ்.சங்கர், எஸ்.மா.அரசு, எம்.கண்ணன், தேரடி பரமசிவம், டி.ஸ்டீபன்ராஜ், விம்கோலெனின், எஸ்.பி.புகழேந்தி, எம்.தினகரன், பிராமண சங்கத்தலைவர் ஜெயராமன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பிரேமலு விமர்சனம்
18 Mar 2024கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கா இசை வெளியீடு
18 Mar 2024நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.