எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இணை நோயாளிகள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை - எண்ணூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர மநாகராட்சி மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதி மக்களுக்கு இணை நோயாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. எண்ணூரில் நேற்று காமராஜர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணை நோயாளிகள் மருத்தவ சிறப்பு பரிசோதனை முகாமில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜானிடாம்வர்கீஸ், மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்;.ஏ.,கே.குப்பன், மண்டல அலுவலர் பால்தங்கதுரை, டிஸ்பி.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பார்வையிட்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது: திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், யூரியா, இருதய நோய், ஆக்ஸிஜன் சொரிவு, யூரியா கிரியேட்டின், கருப்பை மற்றும் வாய்ப்புற்று நோய் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 15,724 பேர் இணை நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் இணை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படின் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு முகாம் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஒரு வாரமாக சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று எண்ணிக்கை குறைவாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. மற்ற மாநிலங்கனை காட்டிலும் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டு அவர்களின் ஆலோசனைகளோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் காய்ச்சல் முகாம் போன்று இணை நோய் சிறப்பு மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மண்டலம் சுமார் 3.50 லட்சம் மக்கள் தொகை கொண்டது.
இங்கு உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைத்து இணை நோய் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது ஊரடங்கின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது.
ஜூலை 31 வரை பொதுபோக்குவரத்து தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரம் வாழ தகுதி இல்லாத நகரம் என்று கூறப்பட்ட நிலையில் இப்பொழுது முதல்வர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான வீடுவீடாக சென்று காய்ச்சல், ஆக்ஸிஜன் பரிசோதனை போன்றவற்றால் தொற்று ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணமாக்கப்படுகிறது.
தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தனது அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் 100 சதவீதம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்து விடலாம். தொழிலாளர்கள் தங்கள் ஊரிலிருந்து தாங்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலைக்கு பணிக்கும் செல்லும் இ-பாஸ் தொடர்பான பிரச்சினைக்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
முடிவில் திருவொற்றியூர் சங்கராச்சாரியார் காலனியில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் புரோகிதர்கள், ஏழை எளிய பிராமண சமூதாயத்தை சார்ந்த 100 குடும்பங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் தலா ஐந்து கிலோ அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அருகில் அதிமுக நிர்வாகிகள் கே.கார்த்திக், இ.வேலாயுதம், ஜி.ரவிக்குமார், புதுகை பாண்டியன், எஸ்.சங்கர், எஸ்.மா.அரசு, எம்.கண்ணன், தேரடி பரமசிவம், டி.ஸ்டீபன்ராஜ், விம்கோலெனின், எஸ்.பி.புகழேந்தி, எம்.தினகரன், பிராமண சங்கத்தலைவர் ஜெயராமன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு திடீர் ‘வாபஸ்'
20 Nov 2025சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பப்பதிவு வாபஸ் ஆனது.
-
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
20 Nov 2025சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.823 கோடிமதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது அமெரிக்கா
20 Nov 2025நியூயார்க்: டாங்கி எதிர்ப்பு ஏவுகண, பீரங்கி குண்டுகள் இந்தியாவுக்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
20 Nov 2025ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசு தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவு படுத்திவருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரயில்
20 Nov 2025சென்னை: சென்னை - ஆந்திரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய வீரர்களுக்கு வரவேற்பு
20 Nov 2025இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது.
-
சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை: வரும் 24-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு
20 Nov 2025கேரளா: சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகையை அடுத்து வரும் 24-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
350 சதவீதம் வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா - பாக். போரை நிறுத்தினேன் : அதிபர் ட்ரம்ப் 60-வது முறையாக பேச்சு
20 Nov 2025வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.
-
வரலாற்றில் முதல்முறை: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இரு பூர்வகுடி வீரர்களுக்கு இடம்
20 Nov 2025மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இரு பூர்வக்குடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
ஒரு ரூபாய் நாணயத்துடன் வைரலாகும் பிரதமர் நரேந்திர மோடியின் க்கடிகாரம்
20 Nov 2025கோவை: ஒரு ரூபாய் நாணயத்துடன் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரலாகிறது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 28 பேர் பலி
20 Nov 2025டெல்லி: போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
-
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது போட்டி அட்டவணை வெளியீடு
20 Nov 2025துபாய்: ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வாய்ப்பு
20 Nov 2025மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர் மக்கள் அன்பு, பாசம் எப்போதும் இதயத்தில் நீங்கா இடம்: பிரதமர் மோடி பதிவு
20 Nov 2025புதுடெல்லி: கோயம்புத்தூர் மக்கள் அன்பு, பாசம் எப்போதும் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.


