முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதா இல்லத்தை கோயிலாக மாற்றிட அரசுடமையாக்கி அம்மாவிற்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி: அம்மா பேரவை சார்பில் நன்றிகளை தெரிவித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : நினைவு எல்லாம் நிறைந்த அம்மாவின் வேதா இல்லத்தை உலகமே கரம் கூப்பி வணங்கும் கோயிலாக மாற்றிட அரசுடமையாக்கி இப்பூவியுள்ளவரை அம்மாவிற்கு அழியாப்புகழை பெற்று தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு  அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினார். 

அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்தவதற்காக பூர்வாங்க அறிவிப்பு வெளியிட்டப்பட்டு அதன்பின் இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்மாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை 21.5.2020 அன்று அமைக்கப்பட்டது. 

இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணை முதல்வரும் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் வகையில் 67.88கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு தற்போது அரசுடமையாக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து வரும் வேளையில்  அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது; 

ஓய்வில்லாமல் உழைத்து, உருகும் மெழுகாய் ஒளிர்ந்து, அன்னை தமிழகத்தை விண்ணை முட்டும் வெற்றிகளால் அலங்கரித்து, உலைக்கு அரிசி தந்து பசியைப் போக்கி, பொன்னி நதி உரிமையை மீட்டு, விஞ்ஞான யுகத்திற்கு சவால் விடும் வகையில் தமிழகத்தை அறிவுசார் பூமியாகி, தமிழகத்திற்கு ஆக்கம் தந்து எட்டு கோடி தமிழினத்தை கட்டி காத்திட்ட எங்கள் குலசாமி, தன் உடல் பேணாது, தன்னலம் பாராது, தமிழகத்தின் நலன் ஒன்றையே கண்ணாகக் கருதி, தம்மை மெய் வருத்தி உழைத்திட்ட தங்கத்தாரகை, இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய தெய்வத்திருமகள், ஆணாதிக்க மிக்க அரசியலை பெண் இனத்திற்கு தேன் ஆதிக்கமாக்கிய உப்பில்லா உரிமைக்குரல், அமெரிக்கா கிளிண்டன், அர்னால்டு, அன்னைதெரசா தொடங்கி உலகத் தலைவர்களையே விழி விரித்து பார்க்க வைத்த வெற்றியின் பொக்கிஷம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாதவம் வாழ்ந்து தமிழினமே, தனக்கு உறவு, தமிழகமேதனக்கு வேலி என்று சங்கத்தமிழ் பூமிக்காக சந்தனமாய் கரைந்த சரித்திர தலைவி  தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், சேவைகளையும், கொடைஉள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு அம்மாவின் இல்லத்தை பார்வைக்கு அனுமதிக்கப்படும் வகையில் ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் உயிர் நாதம் , அம்மா குடியிருந்த கோவிலாம், நினைவு எல்லாம் நிறைந்த வேதா இல்லத்தை, உலகமே கரம் கூப்பி வணங்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றிட இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், வலிமை மிக்க அரசியலை தன் எளிமையால் வணங்க வைத்த எங்கள் புன்னகை போராளி, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் 17.8.2017 அன்று அறிவித்தார்.

அதனைதொடர்ந்து கோடானுகோடி மக்களின் விழிகளை ஈர்த்திட்ட அன்னை ஓர் ஆலயமாய், ஆயிரம், ஆயிரம் வாகைபூக்களை பூக்க வைத்த அதிசயமாம். அம்மா எனும் சொல்லுக்கு அழகு சேர்ந்த காவியம், தாய் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிடும் வகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக 67.88 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அள்ளித் தந்து இதன் மூலம் இப்பூவி உள்ளவரை அம்மாவின் புகழை, மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்து  உலகத் தமிழர்களின் உள்ளத்து வேட்கைக்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா தலைவர், குடிமராமத்து நாயகன், பால் ஹாரீஸ் பொல்லோ விருது பெற்று ஒட்டுமொத்த இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழும், இணை ஒருங்கிணைப்பாளர்,  முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், இந்த வரலாற்று வைபவம் வடிவம் பெறுவதற்கு, துணை நின்று சாதனை படைத்திட்ட பாண்டியநாட்டு பண்பாளர், ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சுக்கும்  அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி செலுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது மட்டுமல்லாது  என்றைக்கும் நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை, அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், வக்கீல் தமிழ்ச்செல்வன் , லட்சுமி , பால்பாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, பிச்சை ராஜன்,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து