எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நினைவு எல்லாம் நிறைந்த அம்மாவின் வேதா இல்லத்தை உலகமே கரம் கூப்பி வணங்கும் கோயிலாக மாற்றிட அரசுடமையாக்கி இப்பூவியுள்ளவரை அம்மாவிற்கு அழியாப்புகழை பெற்று தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்தவதற்காக பூர்வாங்க அறிவிப்பு வெளியிட்டப்பட்டு அதன்பின் இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்மாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை 21.5.2020 அன்று அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணை முதல்வரும் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் வகையில் 67.88கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு தற்போது அரசுடமையாக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து வரும் வேளையில் அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது;
ஓய்வில்லாமல் உழைத்து, உருகும் மெழுகாய் ஒளிர்ந்து, அன்னை தமிழகத்தை விண்ணை முட்டும் வெற்றிகளால் அலங்கரித்து, உலைக்கு அரிசி தந்து பசியைப் போக்கி, பொன்னி நதி உரிமையை மீட்டு, விஞ்ஞான யுகத்திற்கு சவால் விடும் வகையில் தமிழகத்தை அறிவுசார் பூமியாகி, தமிழகத்திற்கு ஆக்கம் தந்து எட்டு கோடி தமிழினத்தை கட்டி காத்திட்ட எங்கள் குலசாமி, தன் உடல் பேணாது, தன்னலம் பாராது, தமிழகத்தின் நலன் ஒன்றையே கண்ணாகக் கருதி, தம்மை மெய் வருத்தி உழைத்திட்ட தங்கத்தாரகை, இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய தெய்வத்திருமகள், ஆணாதிக்க மிக்க அரசியலை பெண் இனத்திற்கு தேன் ஆதிக்கமாக்கிய உப்பில்லா உரிமைக்குரல், அமெரிக்கா கிளிண்டன், அர்னால்டு, அன்னைதெரசா தொடங்கி உலகத் தலைவர்களையே விழி விரித்து பார்க்க வைத்த வெற்றியின் பொக்கிஷம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாதவம் வாழ்ந்து தமிழினமே, தனக்கு உறவு, தமிழகமேதனக்கு வேலி என்று சங்கத்தமிழ் பூமிக்காக சந்தனமாய் கரைந்த சரித்திர தலைவி தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், சேவைகளையும், கொடைஉள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு அம்மாவின் இல்லத்தை பார்வைக்கு அனுமதிக்கப்படும் வகையில் ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் உயிர் நாதம் , அம்மா குடியிருந்த கோவிலாம், நினைவு எல்லாம் நிறைந்த வேதா இல்லத்தை, உலகமே கரம் கூப்பி வணங்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றிட இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், வலிமை மிக்க அரசியலை தன் எளிமையால் வணங்க வைத்த எங்கள் புன்னகை போராளி, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் 17.8.2017 அன்று அறிவித்தார்.
அதனைதொடர்ந்து கோடானுகோடி மக்களின் விழிகளை ஈர்த்திட்ட அன்னை ஓர் ஆலயமாய், ஆயிரம், ஆயிரம் வாகைபூக்களை பூக்க வைத்த அதிசயமாம். அம்மா எனும் சொல்லுக்கு அழகு சேர்ந்த காவியம், தாய் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிடும் வகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக 67.88 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அள்ளித் தந்து இதன் மூலம் இப்பூவி உள்ளவரை அம்மாவின் புகழை, மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்து உலகத் தமிழர்களின் உள்ளத்து வேட்கைக்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா தலைவர், குடிமராமத்து நாயகன், பால் ஹாரீஸ் பொல்லோ விருது பெற்று ஒட்டுமொத்த இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழும், இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், இந்த வரலாற்று வைபவம் வடிவம் பெறுவதற்கு, துணை நின்று சாதனை படைத்திட்ட பாண்டியநாட்டு பண்பாளர், ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சுக்கும் அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி செலுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது மட்டுமல்லாது என்றைக்கும் நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை, அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், வக்கீல் தமிழ்ச்செல்வன் , லட்சுமி , பால்பாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, பிச்சை ராஜன்,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.