முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியாளர்களுக்கு கொரோனா: தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு மருத்துவமனையில் பரிசோதனை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 7-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், காவல் துறையினர், மருத்துவர்கள்,  சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவர்னர் மாளிகையில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் 38 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கவர்னரின் உதவியாளர் தாமசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து கவர்னர் பன்வாரிலால்  புரோஹித்திற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. இருந்தபோதும் அவர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள்  அறிவுறுத்தினர். இதையடுத்து கவர்னர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் மேலும், 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்  மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து