முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டி: வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது: நாளை கடைசி போட்டி நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுத்தாம்ப்டன் : அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது.

அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்குரிய தகுதி சுற்றான சூப்பர் லீக் -காக கணக்கிடப்படுகிறது.

கடந்த 30-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய  2-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பகல்-இரவாக சவுத்தாம்ப்டனில் நடந்தது. 

முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்தது. கேம்பர் அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். அவர் கடந்த ஆட்டத்திலும் அரைசதம் அடித்து இருந்தார்.  அடில் ரஷித் 3 விக்கெட்டும், டேவிட் வில்லே, சகீப் மக்மூத்  தலா 2 விக்கெட்டும், ஜேம்ஸ் வின்ஸ், ரீஸ் டாப்ளே தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 32.3  ஓவர்களில்  6 விக்கெட் இழப்புக்கு 216  ரன் எடுத்து 4  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பேர்ஸ்டோவ் 41 பந்தில் 82 ரன் விளாசினார்.

இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும்  அடங்கும். டேவிட் வில்லே 47  ரன்னும், சாம் பில்லிங்ஸ் 46 ரன்னும் எடுத்தனர். லிட்டில் 3 விக்கெட்டும், கேம்பர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.   இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி போட்டி  நாளை  4-ம் தேதி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து