முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாங்காடு பேரூராட்சி அ.தி.மு.க.அவைத்தலைவர் கொரோனாவால் மரணம் : இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சி கழக அவை தலைவர் கமலஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததற்கு அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சி கழக அவை தலைவர் எம்.எம். கமலஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

அன்பு சகோதரர் கமலஹாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து