முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிவகாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் மறைவுக்கு அ.தி.மு.க.த ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், சிவகாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி. பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

ஆரம்பகால உடன்பிறப்பு பாலகிருஷ்ணன் கட்சியின் மீதும், எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோர் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு இரண்டு முறை சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

அன்பு சகோதரர் பாலகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கி கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து