முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு: ரூ.33.31 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ. 33.15 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ரூ.20.86 கோடி மதிப்பீட்டிலான கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட  8 துறைகளின் கீழ் அம்மா இருசக்கர வாகனம், முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன்கள் மற்றும் இதர கடன்கள் என 15 ஆயிரத்து 16 பயனாளிகளுக்கு ரூ. 33.31 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்படவுள்ள மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், சுற்றுச்சுவர், அறிவியல் ஆய்வகம், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவை என ரூ. 20.86 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 60 கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.15.16 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார். 

இக்கூட்டத்தில், அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, திட்ட இயக்குநர் மகேந்திரன் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  அதையடுத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயி சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து