முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் நகர செயலாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வேதாரண்யம் நகர செயலாளர் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

நாகப்பட்டினம் வேதாரண்யம் நகர அ.தி.மு.க. செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.எம். எழிலரசன் உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். 

கட்சியின் மீதும், அம்மா மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு கட்சி பணிகளையும், மக்கள் பணிகளையும் சிறந்த முறையில் ஆற்றி வந்த ஆரம்ப கால உடன்பிறப்பு எழிலரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கி கொள்ள கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து