எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் 26 கிராம பஞ்சாயத்து, 2 நகராட்சி மற்றும் 1 மாநகராட்சியில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 50 இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். கூட்டணி 4 மாநகராட்சிகளிலும், எல்.டி.எப். கூட்டணி 1 மாநகராட்சியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழலில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக வி.வி.ராஜேஷ் பதவியேற்க வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா, துணை மேயராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல். பா.ஜ.க. தலைமை புதிய மேயரை அறிவிக்கும் என இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விரைவில் திருவனந்தபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தின் முன்னாள் பா.ஜ.க. தலைவரான வி.வி.ராஜேஷ், இந்த தேர்தலில் கொடுங்கனூர் வார்டில் வெற்றி பெற்றார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.ஸ்ரீலேகா, சாஸ்தாமங்கலம் வார்டில் வெற்றி பெற்றார். இவர்களில் வி.வி.ராஜேஷ் மேயராகவும், ஸ்ரீலேகா துணை மேயராகவும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


