முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடிதங்கள் இன்று புத்தகமாக வெளியிடப்படுகிறது

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இன்று ஆங்கில புத்தகமாக வெளியிடப்படுகிறது.

பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். அந்த கடிதங்கள் அனைத்தும் சோமைய்யா என்பவர் மூலம் தொகுக்கப்பட்டு உள்ளது.   

கடந்த 2014-ம் ஆண்டு கடித தொகுப்பு குஜராத் மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது.  இதற்கிடையே அந்த குஜராத்தி புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது.

தற்போது அந்த பணிகள் முடிவடைந்து உள்ளன.  இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்தநாளாகும். இதையொட்டி மோடி, தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆங்கில புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது. 

லெட்டர்ஸ் டூ மதர் என்று அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து