முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளோம்: பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்கள் விவசாயிகளை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்கள் மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பல ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் இடைத் தரகர்கள் உருவாக்கிய பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கொடுமைக்கு ஆளாகி வந்தார்கள். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாக்கள் விவசாயிகளை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளது.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவும், அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் செழிப்பு ஏற்படவும் இந்த மசோதாக்கள் உத்வேகம் அளிக்கும் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து