முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசாஜ் மையம், மதுபானக்கூட வசதிகளுடன் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் ஜனவரியில் மீண்டும் இயக்கம்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மசாஜ் மையம் மற்றும் மதுபானக்கூட வசதிகளுடன் மீண்டும் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகிற ஜனவரி மாதம் இயக்கப்படுகிறது.

ஆடம்பர சுற்றுலா பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் அந்த ரயில் தற்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இந்த ரயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது. 

ரயிலில், தங்கும் அறைகள் புதுப்பித்து அலங்கரிக்கப்பட்டு உள்ளன. குளியல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. பயணிகளின் பொழுதுபோக்குக்காக ஸ்மார்ட் டி.வி. வசதி செய்யப்பட்டு உள்ளது.

அதில் ‘நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார்’ போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, தீ எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டு உள்ளது.  பயணிகளின் மன மகிழ்வுக்காக மசாஜ் சென்டர், உள்நாட்டு மதுபானங்கள் அடங்கிய மதுபானக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

நவீன எந்திரங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடமும் உள்ளது. இயற்கை காட்சிகளை ரசித்தபடியே உணவு உண்ணும் வகையில் ‘ருசி’ மற்றும் ‘நளபாகம்’ என்ற பெயரில் 2 உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 

இத்தனை அம்சங்களும் கொண்ட இந்த சொகுசு ரயிலை கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. 

இதன்படி பிரைடு ஆப் கர்நாடகா என்ற பெயரில் 7 நாள் பயணமாக இயங்கும் ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்கா, சிக்மகளூர், ஹம்பி, பட்டடக்கல் மற்றும் கோவாவுக்கு செல்கிறது. ‘

ஜுவல் ஆப் சவுத்’ என்ற பெயரில் 7 நாள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு ஹம்பி, மாமல்லபுரம், தஞ்சாவூர், செட்டிநாடு, குமரகம் மற்றும் கொச்சிக்கு செல்கிறது. ‘

கிளிம்ப்சஸ் ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 4 நாள் பயணமாக இயங்கும் ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்காவுக்கும், ஹம்பிக்கும் செல்கிறது.  இந்த ரயில் பயணத்துக்கு கட்டணச்சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் செலுத்தும் கட்டணத்தில் உணவு, ஏ.சி. பஸ் பயன்பாடு, சுற்றுலாத்தல நுழைவுக்கட்டணங்கள், மதுபானக்கூடத்தை பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டணம் மற்றும் சலுகை பற்றிய விவரங்களை பயணிகள் அறிந்து கொள்ள 8287931970 மற்றும் 8287931974 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையோ, அல்லது 8287931977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று, ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுற்றுலா முதுநிலை செயல் அதிகாரி மாலதி ரத்தினம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து