முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க 49-வது ஆண்டு தொடக்க விழா: சொந்த ஊரில் கட்சிக் கொடியேற்றி வைத்தார் முதல்வர் எடப்பாடி

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி  கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்தார். முன்னதாக, மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், ஒன்றியக் குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க-வின் சார்பு அமைப்புகளைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து