எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐதராபாத் : ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான அட்டவணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 -ம் தேதி முதல் ஆந்திராவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, நவம்பர் மாதம் 2-ம் தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் (பிளஸ் 1, 2) திறக்கப்படும் என ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்நிலையில், இதற்கான அட்டவணையை மாநில முதன்மைச் செயலாளர் நீலம் சாஹ்னி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
நவம்பர் 2-ம் தேதி 9, 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதே தேதியில் இண்டர்மீடியட் ஜூனியர் கல்லூரிகளும் (முதலாம் ஆண்டு) திறக்கப்படவுள்ளன. 12-ம் தேதி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
23-ம் தேதி முதல் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கும், டிசம்பர் 14-ம் தேதி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இதே அட்டவணை பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |