எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனா விதிமுறைகளின்படி கர்த்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் குருநானக் ஜெயந்தி வருவதை முன்னிட்டு கர்த்தார்பூர் நடைபாதையை மீண்டும் திறக்க மத்திய வெளியறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் சாஹிப்பையும், பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பையும் இணைக்கும் 4.7 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதையை மீண்டும் திறப்பதாக பாகிஸ்தான் அரசு அக்டோபர் 2-ம் தேதி அறிவித்தது.
கர்த்தார்பூர் நடைபாதையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திறந்து வைத்தார். இந்த நடைபாதை இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்தைப் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்போடு இணைக்கிறது. இது சீக்கிய நம்பிக்கையின் நிறுவனர் குருநானக்கின் இறுதி ஓய்வு இடமாகும். சென்ற ஆண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கிய யாத்ரீகர்கள் குருநானக் பிறந்த தினத்தின்போது வருகை தந்தனர்.
பின்னர், கொரோனா தொற்றுநோயை அடுத்து, கர்த்தார்பூர் நடைபாதை இந்திய அரசாங்கத்தால் மார்ச் மாதம் மூடப்பட்டது. பாகிஸ்தான் நாட்டினர் கர்த்தார்பூர் நடைபாதை வழியாகப் பயணம் செய்யவும் அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், கொரோனா விதிமுறைகளின்படி கர்த்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கொரோனா நெறிமுறை காரணமாக கர்த்தார்பூர் நடைபாதை மூடப்பட்டது. நடைபாதையை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர் விரைவில் திறக்கப்படும்.
கர்த்தார்பூர் நடைபாதையை மீண்டும் திறக்கும் முடிவு கொரோனா நெறிமுறைக்கு ஏற்ப இருக்கும். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். கர்த்தார்பூர் நடைபாதை திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


