எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.52 லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராகும் தகுதிக்கான நாளாக கொண்டு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, திருத்தம், இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை எளிதில் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் (சட்டமன்ற தொகுதிக்குள் அல்லது தொகுதிக்கு வெளியே) ஆகியவற்றுக்காக பலர் விண்ணப்பித்தனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கடந்த 21-ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர்களிடம் இருந்து கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்டு உள்ளன. அதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 523 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 46 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 25 ஆயிரத்து 817 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக கொடுக் கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 106 ஆகும். சென்னையில் 23 ஆயிரத்து 856 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 18 ஆயிரத்து 637); திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 389 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 17 ஆயிரத்து 59); காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8,998 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 7,560); செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 ஆயிரத்து 620 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 17 ஆயிரத்து 990) விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
இதேபோல் கடந்த 22-ம் தேதியன்று நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 384 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 6 லட்சத்து 14 ஆயிரத்து 276 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் அதிகபட்சமாக 58 ஆயிரத்து 762 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 888 ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 57 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 32 ஆயிரத்து 638), காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 858 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 13 ஆயிரத்து 896), செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 ஆயிரத்து 196 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 30 ஆயிரத்து 543) விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2 சிறப்பு முகாம்களிலும் மொத்தம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 322 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் மாதத்திலும் 2 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.