எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை மற்றும் பரிசோதனை விறுவிறுப்பாக நடந்தது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா போன்று இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 4 தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகபட்ச குளிர்பதன சேமிப்பு கிடங்குகளில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய சேமிப்பு கிடங்குகள் நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் உருவாக்க முடியும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து தடுப்பூசி மருந்துகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றியும் முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு பதிவு செய்து கொள்ளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்படும்.
முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகளில் யார் யாருக்கு தடுப்பூசி தேவை என்ற பட்டியல் மாநில வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களில் இருந்தும் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடிகளுக்கு வாக்காளர்களை வரவழைப்பதுபோல திட்டமிட்டு ஆங்காங்கே மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் திட்டத்தில் எத்தகைய குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதற்காக 2 நாட்கள் ஒத்திகையை செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் நேற்று (திங்கட்கிழமை) தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை தொடங்கியது. இந்த 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் தலா 25 பேர் வீதம் சுமார் 100 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அந்தந்த மையங்களில் காலையிலேயே வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் தயார் நிலையில் அமர்த்தப்பட்டனர். தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் மையத்தில் இருந்து ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு மணி நேரத்தில் தடுப்பூசி மருந்து வந்து சேருகிறது என்ற நேரம் கணக்கிடப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் மருந்தின் குளிர்பதன தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்ததும் மீண்டும் தடுப்பூசி மருந்து பற்றிய உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.
அதிகாரப்பூர்வ தடுப்பூசி மருந்து இன்னும் அமலுக்கு வராததால் மாதிரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த மையத்தில் சுமார் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டனர். 30 நிமிடங்களில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பயனாளிகள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 4 மாநிலங்களிலும் இத்தகைய அடிப்படையில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. அசாம் மாநிலத்தில் சோனித்பூர், நல்பாரி மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடந்தது.
விஜயவாடா அரசு மருத்துவமனை, உப்பலூர் ஆரம்ப சுகாதார நிலை யம், பூர்ணா ஹார்ட் இன்ஸ்டிடியூட், பெனமலூர் அரசு மருத்துவமனை, பிரகாஷ் நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் இது நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் 25 பேருக்கு டம்மி கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதற்காக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அனைத்திலும் 4 அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன.
தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை, பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் இடம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை அறிய தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவ அதிகாரிகள், டாக்டர் உள்பட 5 பேர் கண்காணித்தனர். இந்த தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
அதிகமுறை தொடர் நாயகன் விருது: விராட் கோலி முதலிடம்
07 Dec 2025மும்பை, சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
-
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
ரோகித், கோலி அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம்: பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தகவல்
07 Dec 2025மும்பை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
என்றும் சமத்துவ தீபம் எரியும் தமிழகத்தில் வளர்ச்சியின் ஒளி பெருகும்: முதல்வர்
07 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும், தமிழ்நாட்டில் வளர்ச்சியின் ஒளி பெருகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மொத்தம் 950 மீட்டர் நீளம் கொண்ட, ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்: நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
07 Dec 2025வாஷிங்டன், நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா
07 Dec 2025விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர்
-
‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ போப் லியோ பங்கேற்பு
07 Dec 2025ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.


