எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை மற்றும் பரிசோதனை விறுவிறுப்பாக நடந்தது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா போன்று இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 4 தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகபட்ச குளிர்பதன சேமிப்பு கிடங்குகளில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய சேமிப்பு கிடங்குகள் நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் உருவாக்க முடியும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து தடுப்பூசி மருந்துகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றியும் முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு பதிவு செய்து கொள்ளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்படும்.
முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகளில் யார் யாருக்கு தடுப்பூசி தேவை என்ற பட்டியல் மாநில வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களில் இருந்தும் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடிகளுக்கு வாக்காளர்களை வரவழைப்பதுபோல திட்டமிட்டு ஆங்காங்கே மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் திட்டத்தில் எத்தகைய குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதற்காக 2 நாட்கள் ஒத்திகையை செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் நேற்று (திங்கட்கிழமை) தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை தொடங்கியது. இந்த 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் தலா 25 பேர் வீதம் சுமார் 100 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அந்தந்த மையங்களில் காலையிலேயே வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் தயார் நிலையில் அமர்த்தப்பட்டனர். தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் மையத்தில் இருந்து ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு மணி நேரத்தில் தடுப்பூசி மருந்து வந்து சேருகிறது என்ற நேரம் கணக்கிடப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் மருந்தின் குளிர்பதன தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்ததும் மீண்டும் தடுப்பூசி மருந்து பற்றிய உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.
அதிகாரப்பூர்வ தடுப்பூசி மருந்து இன்னும் அமலுக்கு வராததால் மாதிரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த மையத்தில் சுமார் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டனர். 30 நிமிடங்களில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பயனாளிகள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 4 மாநிலங்களிலும் இத்தகைய அடிப்படையில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. அசாம் மாநிலத்தில் சோனித்பூர், நல்பாரி மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடந்தது.
விஜயவாடா அரசு மருத்துவமனை, உப்பலூர் ஆரம்ப சுகாதார நிலை யம், பூர்ணா ஹார்ட் இன்ஸ்டிடியூட், பெனமலூர் அரசு மருத்துவமனை, பிரகாஷ் நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் இது நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் 25 பேருக்கு டம்மி கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதற்காக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அனைத்திலும் 4 அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன.
தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை, பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் இடம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை அறிய தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவ அதிகாரிகள், டாக்டர் உள்பட 5 பேர் கண்காணித்தனர். இந்த தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்18 hours 10 sec ago |
ஆனியன் ரிங்ஸ்3 days 17 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 17 hours ago |
-
சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம்
01 Jun 2024சென்னை:சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 84.21 லட்சம் பேர் பயணம்
01 Jun 2024சென்னை:கடந்த மே மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: மின் வாரியம்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்
-
பிரதமர் மோடியின் தியானம் பற்றி எதிர்க்கட்சிகள் விஷம அரசியல் அண்ணாமலை குற்றச்சாட்டு
01 Jun 2024தி.மலை:கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
-
படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு:அரசு வாகனத்தில் அழைத்து சென்று படம் பார்க்க வைத்த வட்டாட்சியர்
01 Jun 2024கடலூர்: ‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று பட
-
தங்கம் விலை சற்று சரிவு
01 Jun 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
வைகோவை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு
01 Jun 2024சென்னை:அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு பயணிகள் மகிழ்ச்சி
01 Jun 2024நெல்லை: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
-
அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
01 Jun 2024கம்பம் : தமிழக அரசின் உத்தரவின்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
-
ஜாமீன் மனு மீது வரும் 5-ம் தேதி தீர்ப்பு: இன்று மீண்டும் சிறை செல்லும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
ஆப்கானில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
01 Jun 2024காபுல் : ஆப்கானிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததுவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
01 Jun 2024சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
-
உதகையில் கனமழையால் சாலையில் வெள்ளப் பெருக்கு
01 Jun 2024உதகை: நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. உதகையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
-
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் ஜூன் 3 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
01 Jun 2024புது டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.
-
ஜூன் 5-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jun 2024சென்னை : ஜூன் 5-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கார்கே பேட்டி
01 Jun 2024புதுடெல்லி: 295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தெரிவ
-
வெப்ப அலை: ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
01 Jun 2024சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
தமிழகத்தில் பா.ஜ.க இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி
01 Jun 2024தூத்துக்குடி:தமிழகத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உறுதிபட தெரிவித்தார்.
-
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு: கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ஜாமீன்
01 Jun 2024பெங்களூரு : பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.
-
சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
01 Jun 2024மும்பை: சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சுட்டெரிக்கும் வெயில்:வட மாநிலங்களில் 75 பேர் பலி
01 Jun 2024புதுடெல்லி: வட மாநிலங்களில் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
கேதர்நாத்-பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
01 Jun 2024கேதர்நாத் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தின் (மே 31) சாமி தரிசனம் செய்தார்.
-
57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
01 Jun 2024புதுடில்லி : 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
வாக்கு எண்ணிக்கையின் போது இண்டியா கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
01 Jun 2024சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது இண்டியா கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.