எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் ஸ்டாலின் இருந்தாரே, சென்னைக்கு அவர் என்ன செய்தார். தூங்கி கொண்டிருந்தாரா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அசோக் நகர் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 1 மணி நேரம் பேசினார். அப்போது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் ஏழை மக்களை எண்ணி, எண்ணி கொண்டுவந்த திட்டங்களைப் போல அம்மாவின் அரசும் ஏழை மக்களைப் பாதுகாக்க திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு ஒரு வருட காலத்திற்கு வழங்குவதற்குத் தேவையான நீரை ஏரிகளில் நிரப்பி வைத்துள்ளோம்.
பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீரை ஒரு சொட்டுகூட வீணாக்காமல் ஏரிகள், குளங்கள், குட்டைகளில் சேமித்து வைக்க குடிமராமத்துத் திட்டத்தைக் கொண்டு வந்த அரசு எங்கள் அரசு. அனைத்துக் கூட்டங்களிலும் அ.தி.மு.க. ஆட்சியில் எந்தத் திட்டங்களும் நடைபெறவில்லை என்று கூறி வருகிறார் ஸ்டாலின். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் தான் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு அடித்தளம் அமைத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி அம்மா கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அம்மாவின் அரசு அதனை கட்டி முடித்து, திறந்து வைத்து தற்போது தண்ணீர் தேக்கி வைத்து உள்ளோம்.
மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் மீஞ்சூர் மற்றும் நெமிலியில் தலா 100 மில்லியன் லிட்டர், நெமிலியில் மேலும் (150+400) 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கு எங்கள் அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொடுங்கையூரில் சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீரை சுத்திகரித்து ஸ்ரீபெரும்புதூருக்கு, வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஸ்டாலின், இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
சென்னை மாநகர மக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு பல்வேறு பாலங்கள் சாலைகளை எங்கள் அரசு அமைத்துக் கொடுத்துள்ளது. ரங்கராஜபுரம், தங்கசாலை சந்திப்பு, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, பேசின் சாலை, வடபழனி பல்லாவரம் மேம்பாலம், வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை, எம்.ஜி. ரோட்டில் சுரங்கப்பாதை, கொரட்டூர் ரெயில்வே கீழ்ப் பாலம் என பல்வேறு பானங்களை கட்டிக்கொடுத்த அரசு எங்கள் அரசு.
ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது ஐந்து வருடங்களாக என்ன செய்தார் என்பதே தெரியவில்லை. அதன் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதும் எதுவும் செய்யவில்லை. ஆனால் கனமழை பொழிந்த போது பார்க்கின்ற இடங்களிலெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதையெல்லாம் அகற்றுவதற்காகத் தானே மேயராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் ஆக்கினார்கள், அப்பொழுதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தீர்களா?
சென்னை மாநகரத்தில் 12,000 சாலைகள் இருக்கின்றன. ஏறத்தாழ 39 ஆயிரத்து 500 மழைநீர் கால்வாய்கள் தற்போது உள்ளன. 954 கிலோ மீட்டர் மழைநீர் கால்வாய்களை சீரமைத்துள்ளோம். அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மழைக்காலங்களில் ஏறத்தாழ மூன்றாயிரம் சாலைகளில் தேங்கி இருந்த நீர் அகற்றப்பட்டுள்ளன. நீங்கள் செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் செய்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அரசு அம்மாவின் அரசு.
அடையாறு, கூவம் சீரமைப்பு, கரைகளை பலப்படுத்தியது, தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற பல பணிகளுக்கு ரூபாய் 1,190 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். அரசைப் பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். கொளத்தூர் -வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பாலம், ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பாலம், மேடவாக்கம் சந்திப்பில் மேம்பாலம், வேளச்சேரி சந்திப்பு, கீழ்க்கட்டளை சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு மேம்பாலம், கொளத்தூர் வலது மேம்பாலம், நெடுங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம், ராதா நகர் ரெயில்வே கீழ் பாலம் என பல்வேறு பாலங்களை கட்டிக் கொண்டிருக்கிறோம்.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க 60 கிலோ மீட்டர் நீள வெளி வட்டச்சாலை அமைத்துள்ளோம். வண்டலூர்- நெமிலிச்சேரி சாலை, நெமிலிச்சேரி- மீஞ்சூர் கட்டம் I, தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமல் பாதியில் விட்டுச் சென்றதை அம்மாவின் அரசே கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கட்டம் II சாலையையும் அம்மாவின் அரசு தான் நிறைவேற்றியுள்ளது.
அதேபோல, 121 கிலோமீட்டர் சென்னை எல்லைச் சாலை ஐந்து பகுதி எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சில பகுதிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அரசின் மீது குற்றம் சுமத்தி அனுதாபங்களை பெற முயற்சி செய்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க. அரசு தான் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகரத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 39 திட்டப் பணிகள் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 225 கோடி மதிப்பீட்டில் 11 திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ளன. தியாகராயர் நகர், தியாகராயர் சாலையில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலும் முடிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். 19-ம் தேதி பிரதமரை சந்தித்து இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு அழைப்பு விடுக்க இருக்கிறேன். அவர் அறிவிக்கும் தேதியில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.
மெட்ரோ ரயில் ரூபாய் 62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 123 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க, ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்து அடிக்கல் நாட்டிச் சென்றுள்ளார். இதில் 122 ரெயில் நிலையங்கள் வரவிருக்கின்றன. மாதவரம் சிப்காட் வழி ஆலந்தூர், மாதவரம் சோழிங்கநல்லூர் வழி அடையார், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழித்தடங்களில் அமையவிருக்கிறது. இத்திட்டங்கள் அனைத்தும் சென்னை மாநகர மக்களுக்கானது. ஆனால் ஸ்டாலினுக்கு மட்டும் இது தெரியவில்லை. அவருக்கு பார்வையில் கோளாறா? ஞாபக சக்தியில் கோளாறா? என்பது தெரியவில்லை. இதன் மூலமாவது அவர் தெரிந்து கொள்ளட்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.