எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						Source: provided
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
கடற்கரை முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. முதலமைச்சர் அழைப்பை ஏற்று அலைஅலையாக குடும்பத்துடன் வந்து மக்களும் தொண்டர்களும் விழாவில் பங்கேற்றனர்.
தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2-வது நபர் ஆவார்.
29 ஆண்டு காலம் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைந்த போது 18 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க. இயக்கத்தை 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்றி காட்டியவர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர். சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்த போது படிப்பு, விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வகித்தார். ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவர். சினிமாவிலும் வெற்றி கொடி நாட்டியவர், இரும்பு பெண்மணி. எடுத்த காரியத்தை முடித்து காட்டும் துணிச்சல் பெண்மணி. ‘அம்மா’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
1948–ம் ஆண்டு பிப்ரவரி 24 –ந் தேதி ஜெயலலிதா பிறந்தார். 2 வயதிலேயே தந்தையை இழந்தவர். 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆட்சியில் இருந்த கட்சி தொடர்ந்து மீண்டும் ஆட்சி செய்யும் நிலையை 32 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படுத்தியவர். மாநில கட்சி ஒன்று நாடாளுமன்றத்தில் 3–வது பெரிய கட்சியாக இடம் பெறும் நிலையையும் உருவாக்கியவர். உலகம் போற்றும் சாதனைகளை செய்தவர். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் அந்த தடை, சோதனைகளை தாண்டி வெற்றி கண்டவர்.
2016–ம் ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அனைவரையும் கவரும் வகையில் அதிசயிக்கத்தக்க வகையில் ரூ.80 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத் தரத்தில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நினைவிடத்தை நேற்று காலை 11 மணி அளவில் திறந்து வைத்தார். முதலில் நினைவிட கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதன் பின்பு நினைவிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அங்கு குவிந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ‘புரட்சி தலைவி அம்மா புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பினார்கள். கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
நினைவிடத்தை திறந்து வைத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். அங்கு ஜெயலலிதாவின் ஆள் உயர பிரமாண்ட படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். அங்கு அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை வணங்கினார்கள். நினைவிடத்தில் மலர் தூவி கீழே விழுந்து வணங்கினார்கள்.
இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் க.சண்முகம், அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்து அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
அங்கிருந்து நேராக அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 11.22 மணி அளவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். தொடர்ந்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவிட வளாக நுழைவுவாயில் அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு முதலமைச்சரும், மற்றவர்களும் நடந்தே வந்தனர்.
பின்னர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
எதிரிகளை வென்று வெற்றிக்கனியை சமர்ப்பிக்க எங்களுக்கு அருள்தாருங்கள் அம்மா என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் பேசும்போது, ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி புகழாரம் சூட்டினார்.
அனைவருக்கும் ‘ரோல் மாடலாக’ அம்மா திகழ்ந்தார். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி அமைவதே அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றி கடன் என்று முதலமைச்சர் கூறினார்.
இரவு பகல் பாராது அம்மாவின் சாதனைகள், ஆட்சியின் சாதனைகளை சொல்லி அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். வெற்றி காண்போம் என்றும் கூறினார்.
இறுதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் குவிந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 
-   
          கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. 
-   
          சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
-   
          பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார். 
-   
          இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-   
          ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது. 
-   
          ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
-   
          ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
-   
          சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.31 Oct 2025
-   
          கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு. 
-   
          இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
-   
          பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர 
-   
          வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
-   
          த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
-   
          பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க 
-   
          அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 
-   
          முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
-   
          ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
-   
          டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்31 Oct 2025மதுரை : டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். 
-   
          தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். 
-   
          கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய கோர்ட்டு உத்தரவு அமலாக்கத்துறை நடவடிக்கை31 Oct 2025புதுடெல்லி, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
-   
          இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். 
-   
          ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி : இந்திய மகளிர் அணி சாதனை31 Oct 2025மும்பை : ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. 
-   
          கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிச. 31-ம் தேதி வரை பயணிக்க போக்குவரத்து கழகம் அனுமதி31 Oct 2025சென்னை : கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

























































