எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
கடற்கரை முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. முதலமைச்சர் அழைப்பை ஏற்று அலைஅலையாக குடும்பத்துடன் வந்து மக்களும் தொண்டர்களும் விழாவில் பங்கேற்றனர்.
தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2-வது நபர் ஆவார்.
29 ஆண்டு காலம் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைந்த போது 18 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க. இயக்கத்தை 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்றி காட்டியவர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர். சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்த போது படிப்பு, விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வகித்தார். ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவர். சினிமாவிலும் வெற்றி கொடி நாட்டியவர், இரும்பு பெண்மணி. எடுத்த காரியத்தை முடித்து காட்டும் துணிச்சல் பெண்மணி. ‘அம்மா’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
1948–ம் ஆண்டு பிப்ரவரி 24 –ந் தேதி ஜெயலலிதா பிறந்தார். 2 வயதிலேயே தந்தையை இழந்தவர். 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆட்சியில் இருந்த கட்சி தொடர்ந்து மீண்டும் ஆட்சி செய்யும் நிலையை 32 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படுத்தியவர். மாநில கட்சி ஒன்று நாடாளுமன்றத்தில் 3–வது பெரிய கட்சியாக இடம் பெறும் நிலையையும் உருவாக்கியவர். உலகம் போற்றும் சாதனைகளை செய்தவர். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் அந்த தடை, சோதனைகளை தாண்டி வெற்றி கண்டவர்.
2016–ம் ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அனைவரையும் கவரும் வகையில் அதிசயிக்கத்தக்க வகையில் ரூ.80 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத் தரத்தில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நினைவிடத்தை நேற்று காலை 11 மணி அளவில் திறந்து வைத்தார். முதலில் நினைவிட கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதன் பின்பு நினைவிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அங்கு குவிந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ‘புரட்சி தலைவி அம்மா புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பினார்கள். கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
நினைவிடத்தை திறந்து வைத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். அங்கு ஜெயலலிதாவின் ஆள் உயர பிரமாண்ட படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். அங்கு அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை வணங்கினார்கள். நினைவிடத்தில் மலர் தூவி கீழே விழுந்து வணங்கினார்கள்.
இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் க.சண்முகம், அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்து அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
அங்கிருந்து நேராக அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 11.22 மணி அளவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். தொடர்ந்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவிட வளாக நுழைவுவாயில் அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு முதலமைச்சரும், மற்றவர்களும் நடந்தே வந்தனர்.
பின்னர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
எதிரிகளை வென்று வெற்றிக்கனியை சமர்ப்பிக்க எங்களுக்கு அருள்தாருங்கள் அம்மா என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் பேசும்போது, ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி புகழாரம் சூட்டினார்.
அனைவருக்கும் ‘ரோல் மாடலாக’ அம்மா திகழ்ந்தார். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி அமைவதே அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றி கடன் என்று முதலமைச்சர் கூறினார்.
இரவு பகல் பாராது அம்மாவின் சாதனைகள், ஆட்சியின் சாதனைகளை சொல்லி அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். வெற்றி காண்போம் என்றும் கூறினார்.
இறுதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் குவிந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.