எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டாலினின் அப்பா முதல்வராக இருந்தார். தி.மு.க. தலைவராக இருந்தார். ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார். எம்.எல்.ஏ. ஆனார், துணை முதல்வரானார். மக்களுடைய துயர் என்னவென்றே அவருக்குத் தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் ஸ்டாலின். நான் அப்படியல்ல, உங்களைப் போல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து படிப்படியாக வந்தவன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (18.2.2021) திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு அ.தி.மு.க. அரசு. ஜெயலலிதா இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென்று தெரிவித்தார். அவரது மறைவிற்குப் பிறகு அவர் வழியில் செயல்படும் அரசு தற்போது உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் தந்துள்ளது. 2006 ஆட்சியில் அப்போதிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாகச் சொன்னார். எத்தனை பேருக்கு நிலம் கிடைத்தது? அப்படி மக்களை ஏமாற்றுகின்ற கட்சிதான் தி.மு.க. நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம். அ.தி.மு.க. அரசு உங்களுடைய அரசு.
ஆட்சியில் இருக்கும்போது மக்களை கவனிக்க மாட்டார்கள், மக்களின் பிரச்சினையைத் தீர்க்க மாட்டார்கள். ஆனால், வெற்றி பெறுவதற்காக, வாக்குகளைப் பெறுவதற்காக ஊர் ஊராக வந்து பொய் பேசி, நாடகமாடி, உங்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுகின்ற கட்சிதான் தி.மு.க. நான் எதுவும் பொய் பேசவில்லை.
நான் உங்களைப்போல கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் வாழ்ந்து வாழ்கின்றவன், இன்றைக்கும் நான் விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே, மக்களின் துன்பங்கள், பிரச்சினைகளை நன்கு அறிந்தவன். எனவே, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு என்ன வழி என ஆய்வு செய்து, நாங்கள் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிறோம்.
ஸ்டாலின் அப்படியல்ல. அவரது அப்பா முதல்வராக இருந்தார், தி.மு.க. தலைவராக இருந்தார், எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார்கள், எம்.எல்.ஏ. ஆனார், துணை முதல்வரானார். மக்களுடைய கஷ்டம் என்னவென்றே அவருக்குத் தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் தி.மு.க. தலைவர்.
நான் அப்படியல்ல. உங்களைப் போல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கட்சியில் கிளைக் கழகச் செயலாளராக தொடங்கி, படிப்படியாக உயர்ந்து எம்.எல்.ஏ ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சராகி, முதல்வர் ஆகியுள்ளேன். கட்சியிலும் அப்படித்தான் பதவி கிடைத்திருக்கிறது. ஆகவே, உழைத்தால் அந்த உழைப்பின் அருமை தெரியும். உழைக்காமலிருந்தால் அந்த அருமை தெரியாது, கஷ்டம் தெரியாது, பிரச்சினை தெரியாது, மக்களுக்கு நன்மை செய்யத் தெரியாது.
மேடையில் மிட்டா மிராசுதாரரா உட்கார்ந்திருக்கிறோம்? தி.மு.க. ஆட்சியில் எங்களைப் போல் இருப்பவர்கள் யாராவது இந்தப் பதவிக்கு வரமுடியுமா? விடுவார்களா? கருணாநிதி, ஸ்டாலின், இப்போது உதயநிதி. குடும்பம்தான் ஆட்சிக்கு வர முடியும், வேறு யாரையும் ஆட்சிக்கு வர விடமாட்டார்கள், அதிகாரத்திற்கும் வரமுடியாது. தமிழ்நாடு முழுவதும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
எல்லா மீட்டிங்கிலும் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். வேறு யாராவது வந்தால் கட்சியைக் கைப்பற்றி விடுவார்கள் என்று பயம். அ.தி.மு.க.வில் அப்படியில்லை. நான், எம்.எல்.ஏ, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் வருவார்கள், மேடையிலிருக்கும் அனைவரும் உங்களைச் சந்தித்து உங்களுடைய எண்ணங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள். இது மக்களுடைய அரசாங்கம். நான் முதல்வர் என்று எப்போதும் எண்ணியதில்லை. இங்கே அமர்ந்திருக்கின்றீர்களே, நீங்கள் தான் முதல்வர். நீங்கள் போடுகின்ற உத்தரவைச் செயல்படுத்துகின்ற பதவி முதல்வர் பதவி. ஸ்டாலின் அப்படியில்லை. மூன்று மாதத்தில் முதல்வராகி விடுவாராம். எப்படி முடியும்? தேர்தல் அறிவித்து, மக்கள் ஓட்டுப் போடவேண்டும், எண்ண வேண்டும், பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறவேண்டும், அப்போதுதான் வரமுடியும்.
முதல்வர் பதவி, கடையில் கிடைக்கும் பொருளா, பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? மக்களால் தேர்ந்தெடுக்கின்ற பதவி. அதை மறந்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களைச் சந்தித்து, என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்று சொல்கிறோம், இன்னும் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்கிறோம். மக்கள் அதை நம்புகிறார்கள், மக்கள் வாக்களிக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு மீண்டும் லபுஷேனுக்கு வாய்ப்பு
05 Nov 2025பெர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மார்ன்ஸ் லபுசேனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை
05 Nov 2025மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
-
பூங்கா இடத்தில் வேறு கட்டிடங்களை கட்டக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை
05 Nov 2025மதுரை: பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
பிலிப்பின்ஸில் கோர தாண்டவம்: கேல்மெகி புயலுக்கு 66 பேர் பலி
05 Nov 2025மணிலா: மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்
05 Nov 2025காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹாலின் (பிரசண்டா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) உள்பட 9 கட்சிகளை ஒன்றிணைத்து நேபாள கம்யூனிஸ்ட் க
-
சாதி, மத அரசியலால் நாட்டுக்கு பெரும் தீங்கு: ராஜ்நாத்சிங் பேச்சு
05 Nov 2025பாட்னா: சாதி, மதம் தொடர்பான அரசியல் நாட்டுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தை வைத்து அரசியல
-
காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
05 Nov 2025சேலம்: காரை வழிமறித்து தாக்குதலை தொடர்ந்து இருதரப்பினர் இடையே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள்: லல்லு பிரசாத் யாதவ் சூசகம்
06 Nov 2025பாட்னா, ரொட்டியை திருப்பி போடுகள் என்று லல்லு பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிச. 2-ல் தொடங்குகிறது: மத்திய அமைச்சர் தகவல்
06 Nov 2025புதுடெல்லி, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்


