எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளாகியிருக்கிறது.
மும்பையில், தாவூத் இப்ராஹிமின் மறைந்த சகோதரி ஹசீனா பார்க்கருக்குச் சொந்தமான சொத்துகள் செவ்வாயன்று ஏலம் விடப்பட்ட போது ஏலத்தில் ஒருவர்கூட பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ரத்னகிரி மாவட்டம், கேத் தாலுகாவில், தாவூத்தின் சொந்த கிராமமான மும்பாகேவில் நான்கு விவசாய நிலங்கள் உள்பட ஒன்பது சொத்துகள் ஏலத்துக்கு விடப்பட்டன. ஆனால், ஏலம் எடுக்க ஒருவரும் வராததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு விவசாய நிலங்களும் முதலில் தாவூத்தின் தாய் அமினா பி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு பிறகு, அது அவரது சகோதரி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம் விடப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


