எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு நாள் நாம் இருந்தோம் அப்படிப்பட்ட இந்த சூழலில் நம்முடைய சொந்தங்களின் மனம்பற்றி இருக்க வேண்டியது நம் கடமை அதனால்தான் இவ்வளவு காலம் மௌனம் காத்து வந்தோம்.
அப்படி அமைதியாக இருந்த நேரத்தில் நம்மை பற்றி வன்ம அரசியல் வலைகள் ,அர்த்தமற்ற அவதூறுகள், என நம்மை சுற்றி பின்னப்பட்டது பரப்பப்பட்டது. இவற்றை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணையோடு துடைத்து எறிய தான் போகிறோம்.ஆனால் அதற்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு ஒரு நாகரீக பதிலடி கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
அரசியல் செய்ய விருப்பம் இல்லை என அடிக்கடி சொல்கின்ற முதல்வர் நம்மை குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்வதன் வாயிலாக பெருந்தன்மையை பெயரளவில் பேசும் முதல்வர், தமிழக சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு வன்மத்தை கக்கி இருக்கிறார்கள் எனவும் எப்படிப்பட்ட அரசியல் என்று தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள். இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இல்லாத அதிக கட்டுப்பாடு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தது பிரச்சார நேரத்தில் பேருந்துகுள் மட்டும் தான் இருக்க வேண்டும், மக்களை பார்த்து கையசைக்க கூடாது, பேருந்து மேலே ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இப்படி ஒரு அரசியல் காழ்புணர்ச்சியுடன் நேர்மை திறனற்று நம்மை பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட தமிழக முதல்வருக்கு ஒரு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். பொய் மூட்டைகளையும், அவதூர்களையும் அவிழ்த்து விட்ட, கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களுக்கும், கபட நாடக தி.மு.க. அரசின் தில்லுமுல்லுகளை தாக்கு பிடிக்க இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் நின்றதை மக்கள் அறியாமலா இருப்பார்கள்.
உச்சபட்ச அதிகார மயக்கத்திலிருந்து தமிழக முதல்வர் பேசினாரோ மனிதாபிமானம் அரசியல் அறம் மாண்பு இவை எல்லாம் எதுவுமே இல்லாமல் வெறும் பேச்சில் மட்டும் பேசிக் கொண்டு அரசியல் ஆட்டத்தை ஆட தொடங்கி விட்டார் தமிழக முதல்-அமைச்சர். இப்பொழுது நான் கேட்ட கேள்வி அனைத்தும் நான் கேட்கவில்லை உச்ச நீதிமன்றம் கேட்டது. இவையெல்லாம் ஏன் எதற்கு என முதல்வர் அவர்களுக்கு புரிகின்றதா. உச்சநீதிமன்றம் மட்டுமல்ல நிஜத்திலும் மக்களுக்கு தமிழக அரசு மீது இருக்கின்ற நம்பிக்கை முழுவதுமாக மண்ணில் புதைந்து விட்டது இதுவாவது தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு புரியுதா அல்லது புரியவில்லையா அப்படி இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த தி.மு.க. தலைமைக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் மக்கள் புரிய வைப்பார்கள்.
அப்பொழுது கூட இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அப்படி என்று. ஒரு அறிக்கையை வெளியிட்டு அறிவாலயத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இப்பொழுதே அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று. போன பொதுக்குழுவில் என்ன சொன்னேன் அதேதான் மீண்டும் சொல்கிறேன் இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவங்களில் மாபெரும் சக்தியாக நம் கூட நிற்கும் பொழுது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார். அதனால் தோழர்களே நமக்கு வந்திருக்கும் இந்த இடையூறு தற்காலிக இடையூறு மட்டுமே அதனால் அனைத்தையும் தகர்த்தெறிவோம் மக்களோடும் கைகோர்த்து நிற்போம் மக்களுடன் களத்தில் இருப்போம் நம் பயணத்தில் தடம் மாறவே மாட்டோம்.
இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று த.வெ.க. இன்னெற்று தி.மு.க.. இந்த போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. நூறு சதவீதம் வெற்றி நமக்கே வாகை சூடுவோம் வரலாறு படைப்போம் நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
ஆங்கில தேர்வில் தோல்வி: 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணிநீக்கம்
04 Nov 2025வாஷிங்டன்: ஆங்கில தேர்வில் தோல்வி அடைந்ததால் 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
கனடாவில் இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு
04 Nov 2025டொரண்டோ: கனடாவில் இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி: அ.தி.மு.க. கடும் விமர்சனம்
04 Nov 2025சென்னை: பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி வழங்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அ.தி.மு.க. கடும் விமர்சனம் செய்துள்ளது.
-
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
04 Nov 2025சென்னை: தி.மு.க.-வில் இணைந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் நடைபெறும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடருக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
கோவை வன்கொடுமை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்க தாமதம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
05 Nov 2025சென்னை, கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? என்று கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; தானாகவே நடக்கும்: இ.பி.எஸ். பேச்சு
05 Nov 2025சென்னை, கூட்டணி குறித்து கவலை வேண்டாம், அது தானாகவே நடக்கும் என மாவட்டச் செயலாளர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
வேலூரில் ரூ.32 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2025சென்னை, 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை முதல்வர்
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
கோவை வன்கொடுமை சம்பவத்தில் கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்
05 Nov 2025கோவை, கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


