முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பீகார் முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா: சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பீகார் முதல்வர் மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டியுள்ளார்.

நாடு முழுவதும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ரக்சா பந்தன் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி ஆசிகளை பெறுவர்.

நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் இதனை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டினார்.  இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரக்சா பந்தன் தினம் ஆனது விருட்ச ரக்சா திவாஸ் (மரம் பாதுகாப்பு தினம்) ஆக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  மக்களை பாதுகாப்பது போன்று பொதுமக்கள் மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து