முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனோ பரவலை கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகள் கையாளுங்கள்: கேரளம், மகராஷ்டிரத்திற்கு மத்திய அரசு கடிதம்

சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  5 தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு கேரளம் மற்றும் மகராஷ்டிர அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

நாட்டில் நேற்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் மட்டும் 32,801 பேரிடம்  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,801 பரிசோதனைகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவர்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர், 18,503 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், அச்சுறுத்தும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரளம் மற்றும் மகராஷ்டிர அரசின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு, வீடாக சென்று கண்காணித்தல், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், முழு வீச்சில் கொரோனா தடுப்பூசியை செலுத்துவது, தொடர்ந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்தல் உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ளுமாறும், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டிலேயே கேரளத்தில் தொற்று பாதிப்பு மிகவும் உச்சத்தில் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து