எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில், அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இன்றைக்கு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில், மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இதற்காகத் தமிழக முதல்வரை மனதாரப் பாராட்டுகிறேன்.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, அன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்த அ.தி.மு.க. அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற பாஜகவின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தபோது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற வகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம்.
ஆனால், மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலே முதுகெலும்பில்லாத அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க. அரசிடம் நிபந்தனை விதிக்க முடியவில்லை. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது.
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. ஆட்சிதான் பொறுப்பாகும்.
கடந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டதை தமிழக சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்தது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். இதன் மூலம், தமிழக சட்டப்பேரவையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவு பெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம்.
அத்தகைய படுபாதகச் செயலைச் செய்தவர்கள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின்போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டபோது, குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள் இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும்.
அதேபோல, நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்திலே படிக்கிற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான கனவுகளைச் சிதைத்துச் சீரழித்த அ.தி.மு.க.வினருக்கு உரிய தண்டனையைக் கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. இதுகுறித்து, சட்டம் இயற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை இருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மாநில அரசுகளைக் கலந்தாலோசனை செய்து ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக, தன்னிச்சையாக மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில், பொதுப் பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான நீட் தேர்வு குறித்து மத்திய பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றுவது கூட்டாட்சி தத்துவத்துக்குக் கேடு விளைவிப்பதாகும்.
எனவே, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரிய அழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும் முதல்வர் மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள்.
இதன் மூலம், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது: அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
18 Sep 2025பியாங்யாங்: அதிபர் கிம் போட்ட உத்தரவால் வடகொரிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.