எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில், அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இன்றைக்கு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில், மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இதற்காகத் தமிழக முதல்வரை மனதாரப் பாராட்டுகிறேன்.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, அன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்த அ.தி.மு.க. அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற பாஜகவின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தபோது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற வகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம்.
ஆனால், மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலே முதுகெலும்பில்லாத அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க. அரசிடம் நிபந்தனை விதிக்க முடியவில்லை. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது.
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. ஆட்சிதான் பொறுப்பாகும்.
கடந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டதை தமிழக சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்தது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். இதன் மூலம், தமிழக சட்டப்பேரவையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவு பெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம்.
அத்தகைய படுபாதகச் செயலைச் செய்தவர்கள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின்போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டபோது, குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள் இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும்.
அதேபோல, நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்திலே படிக்கிற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான கனவுகளைச் சிதைத்துச் சீரழித்த அ.தி.மு.க.வினருக்கு உரிய தண்டனையைக் கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. இதுகுறித்து, சட்டம் இயற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை இருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மாநில அரசுகளைக் கலந்தாலோசனை செய்து ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக, தன்னிச்சையாக மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில், பொதுப் பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான நீட் தேர்வு குறித்து மத்திய பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றுவது கூட்டாட்சி தத்துவத்துக்குக் கேடு விளைவிப்பதாகும்.
எனவே, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரிய அழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும் முதல்வர் மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள்.
இதன் மூலம், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-12-2025.
31 Dec 2025 -
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
31 Dec 2025கிரிபாட்டி, உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ கிரிபாட்டி தீவு வரவேற்று கொண்டாடியது.
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2025வெலிங்டன், 2026 புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் நியூசிலாந்து வரவேற்றது.
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



