எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துபாயில் இன்று மீண்டும் தொடங்கவுள்ள ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்.லின் 2-ம் பகுதி ஆட்டத்தின் 30-வது லீக்கில் எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. மே 2-ம் தேதி 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டது.
14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட ஆட்டங்கள் இன்று (19-ம் தேதி) தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி...
துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கிறது. அக்டோபர் 8-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முதல் குவாலிபையர் அக்டோபர் 10-ம் தேதியும், எலிமினேட்டர் 11-ம் தேதியும், 2-வது குவாலிபையர் 13-ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ம் தேதி துபாயிலும் நடக்கிறது.
29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2-வதுமற்றும் 3-வது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (6 புள்ளி), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளி ) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களில் உள்ளன. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளே ஆப்” சுற்றுக்கு முன்னேறும்.
முதல் ஆட்டத்தில்...
துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
கடந்த 2020 சீசன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு சோகமானதாக அமைந்தது. முதன்முறையாக பிளே ஆ‘ஃ‘ப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. எனினும் அதில் இருந்து மீண்ட சென்னை அணி நடப்பு 2021 தொடரின் முதல் சிறப்பாக ஆடி 5 வெற்றிகளுடன் அணிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னை அணியில் முக்கிய வீரரான டுபிளெஸிஸ் காயத்தால் பங்கேற்பது சந்தேகமே. கொரோனா குவாரன்டைன் விதிகளால் இங்கிலாந்து ஆல்ரவுண்டா் சாம் கர்ரனும் தொடரில் பங்கேற்கவில்லை. பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, ருத்துராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, உத்தப்பா, டோனி ஆகியோர் வலு சோ்க்கின்றனா். சாம் கர்ரன் இல்லாதது சென்னைக்கு பலவீனமாக அமையும். மிடில் ஆா்டரில் ராயுடு, டோனி, ஜடேஜா களமிறங்கலாம்.
4-ம் இடத்தில்...
அதே வேளை மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சா்மா பேட்டிங்கில் சிறப்பான ஃபார்முடன் உள்ளார். ஆல் ரவுண்டா் பொல்லார்ட் , குயிண்டன் டி காக், சூரியகுமார் யாதவும் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை தருகின்றனா். ரோஹித்-டி காக் தொடக்க வரிசையில் களம் இறங்குவா். மூன்றாவது வரிசையில் இஷான் கிஷான், 4-வது வீரராக சூரியகுமார் யாதவும் களமிறங்கலாம் எனத் தெரிகிறது. ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருணால் பாண்டியா என 3 ஆல்ரவுண்டா்கள் மும்பை தரப்பில் உள்ளனா்.
அணிகள் விவரம்:
ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹேசல்வுட், சா்துல் தாகுா், லுங்கிநிகிடி, தீபக் சஹார்.
ரோஹித் சா்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, நாதன் கூல்டா் நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், ஜஸ்ப்ரீத் பும்ரா, டிரென்ட் பௌல்ட்.
அதிக சிக்ஸர்கள்...
கடந்த வருடம் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் 137 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 105 சிக்ஸர்களுடன் ராஜஸ்தானுக்கு 2-ம் இடம். இந்த வருடம் பந்தை சிக்ஸருக்குப் பறக்க விடுவதில் சிஎஸ்கே முன்னணி வகிக்கிறது. சிக்ஸர்கள் பட்டியலில் 43 சிக்ஸர்களுடன் மும்பை அணி 7-வது இடத்தை ஹைதராபாத் அணியுடன் இணைந்து வகிக்கிறது. டெல்லி அணி சிக்ஸர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 32 சிக்ஸர்கள் மட்டுமே. ஏழு ஆட்டங்களில் 62 சிக்ஸர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
முதலிடத்தில் ராகுல்...
இந்த வருடம், அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஐ.பி.எல் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்கள்.
1) கே.எல். ராகுல் - 16, 2) பேர்ஸ்டோ - 15, 3) ராயுடு - 13, 4) பட்லர் - 13, 5) ரஸ்ஸல் - 13, 6) டு பிளெஸ்சிஸ் - 13, 7) பொலார்ட் - 13.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.
-
2025-2026 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
06 Jul 2025சென்னை: 2025-2026 கல்வி ஆண்டுகான பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
-
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் * லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் * பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு
06 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா
06 Jul 2025பர்மிங்காம்: ஆகாஷ் தீப் அபார பந்து வீச்சு காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
-
முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை தமிழ்நாடு அரசு பெருமிதம்
06 Jul 2025சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உ
-
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி சுற்றுப்பயணம்
06 Jul 2025சென்னை: அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
-
சென்னையில் மினி மாரத்தான் போட்டி: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
06 Jul 2025சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.
-
நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை சந்தித்து நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்
06 Jul 2025சென்னை: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார்.
-
ஜூலை 8-ல் த.வெ.க. பயிற்சி பட்டறை ஆலோசனைக்கூட்டம்
06 Jul 2025சென்னை: த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
2,299 கிராம உதவியாளர் பணிக்கு அரசு அறிவிப்பாணை வெளியீடு
06 Jul 2025சென்னை: காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி