முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த கூடுதலாக ஒரு நாள் கூட அவகாசம் தரமுடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த கூடுதலாக ஒரு நாள் கூட அவகாசம் தரமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த முடியாது என்பதால் அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதன்படி இத்தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபரில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் ஆறு மாத காலம் அவகாசம் தேவை என்று தமிழக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக அவகாசம் கோரியது. இது குறித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, புதிய நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதால் வார்டு வரையறை பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். பொதுத்தேர்தலை நடத்தும் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம் போதுமானது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்தது. இதையடுத்து, தேர்தலை நடத்த அவகாசம் கேட்டது பற்றி இரண்டு நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து