எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் போட்டியின் 35-வது லீக் ஆட்டம், வெள்ளிக்கிழமை சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் பெங்களூரு அணியும், மகேந்திர சிங் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை சூப்பங் கிங்ஸ்.
கோலி - படிக்கல்...
டாஸ் வென்ற சென்னை, பெங்களூரை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
111 ரன்கள் வரை...
13.2 ஓவர் வரை இருவரும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் 111 ரன்கள் வரை குவித்தனர். இருவருமே அரை சதம் விளாசியதும் பாராட்டுக்குரியது. பெங்களூருக்கு இந்த இரு பேட்ஸ்மென்களும் இரும்பு அரண் போல நின்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த போது, சென்னை விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது என்றே சொல்லலாம்.
தகர்த்தார் ப்ராவோ...
ஹேசல்வுட், ஜடேஜா, ப்ராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என சென்னையின் அனைத்து பந்து வீச்சாளர்களும் ஒரு சுற்று வந்துவிட்டனர். அப்போதும் பெங்களூரின் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, ப்ராவோவின் 13.2-வது பந்தில், விராட் கோலி அடித்த பந்து ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது. பெங்களூரின் பேட்டிங் அரண் தகர்ந்தது.
அடுத்தடுத்து அவுட்...
வலுவான பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருக்கும் பெங்களூரு அணி, அடுத்தடுத்து சிறப்பாக அடித்து ஆடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஏ பி டிவில்லியர்ஸ், தேவ் தத் படிக்கல், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் என எல்லா முன்னணி பேட்ஸ்மென்களும் சீட்டு கட்டு போல சரிந்தது. கோலி, படிக்கல் தவிர எந்த ஒரு பெங்களூரு பேட்ஸ்மென்னும் 15 ரன்களைக் கூட தொடவில்லை.
7 ஓவர்களில்...
13 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல் ஆடி வந்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளைப் பரிகொடுத்து 45 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரின் பேட்டிங் அரணைத் தகர்த்த ப்ராவோ, 4 ஓவர்களுக்கு 24 ரன்களை விட்டுக் கொடுத்து, கோலி, மேக்ஸ்வெல் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை வசம்...
அவரைத் தொடர்ந்து 4 ஓவர்களை வீசிய ஷர்துல் தாகூர் 29 ரன்களைக் கொடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 14-வது ஓவர் முதல் ஆட்டம் சென்னையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன் பிறகு ஆட்டம் நிறைவடையும் வரை அவர்களே ஆதிக்கம் செலுத்தி வென்றனர்.
157 ரன்கள் இலக்கு...
பெங்களூரின் ஆட்டத்துக்குப் பிறகு, ஷார்ஜா போன்ற மைதானத்தில் சென்னை போன்ற அணிக்கு எதிராக 156 ரன்கள் மட்டுமே குவித்திருப்பது போதாது என கூறப்பட்டது. 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டூப்ளசி ஜோடி சிறப்பாகத் தொடங்கினர்.
மொயின் - அம்பதி...
8.2-வது ஓவரில் 38 ரன்களோடு ரிதுராஜும், 9.1-வது ஓவரில் 31 ரன்களோடு ஃபாஃப் டூப்ளசியும் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருப்பினும் சென்னையின் பேட்டிங் லைன் அப் வலுவானது என்பதால், அடுத்தடுத்து வந்த மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோரும் அடித்து விளையாடினர்.
4-வது முறை...
கடைசியில் சுரேஷ் ரெய்னா, டோனி இணை நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி பெற்றனர். இந்த ஜோடி இணைந்து ஐ.பி.எல் போட்டிகளை நிறைவு செய்வது இது நான்காவது முறை.சென்னை 11 பந்துகளுக்கு முன்பே அடித்து போட்டியை வென்றது. ப்ராவோ பந்துவீச்சு பெங்களூருவின் ரன்ரேட்டுக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது, சென்னை எளிதில் வெற்றி பெற வழிவகுத்தது.
தொடர்ந்து சறுக்கல்
ஏப்ரல் மாதம் ஐ.பி.எல் 2021 சீசன் தொடங்கிய போது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளை வெற்றி கொண்டனர்.
2021 ஏப்ரல் 25 அன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான முதல் போட்டியில், தோல்வி கண்டது பெங்களூரு. அப்போது முதல் அவ்வணியின் சறுக்கல் தொடர்ந்து வருகிறது. அதன் பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் மட்டுமே வென்றது பெங்களூரு.
இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7-ல் வென்று 14 புள்ளிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திலும், பெங்களூரு அணி 9 போட்டியில் 5-ல் வென்று மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.