முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் 11-ம் தேதி வரை தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவையும் வருகிற 11-ம் தேதி வரை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 

பெங்களூருவில் கொரோனா காரணமாக 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கிறது. கொரோனா காரணமாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பஸ், ரெயில், விமான நிலையங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து