எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் நடைபெற்றன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த டிச. 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று (பிப். 14) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தற்போது 9,44,211 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,43,595 ஆண்கள், 5,00,477 பெண்கள், 139 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த வருகிற 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் வருகிற பிப். 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


