எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது பணியின் தாக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். “வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது அதிவிரைவாக நடைபெறும் ஆட்டம் என்பதால் டோனி, டிரஸ்சிங் ரூமில் வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவலாம். அதே நேரத்தில் அணிக்கு தேவைப்படும் போது கள வியூகங்களையும் அவர் அமைத்துக் கொடுக்கலாம்.
டைம்-அவுட்டின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்புள்ளது. மற்றபடி ஆட்டத்தின் அழுத்தம் தொடங்கி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு களத்தில் நிற்கும் வீரர்கள் தான். டோனியை இந்த பணிக்கு நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே போல நாக்-அவுட் நிலைகளில் சரியான ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டும். அதை செய்ய தவறினால் பாதகமாக அமையலாம். மேலும் முதலில் பேட் செய்ய வேண்டியதும் அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
_____________
எதுவும் நடக்கலாம்: இங்கி. வீரர் ஹூசைன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவிக்கையில்., இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கலாம். ஆனால் டி-20 பார்மெட் கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் பேவரைட் அணி என என்னால் சொல்ல முடியாது. தனியொரு வீரரின் ஆட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். அந்த வீரர் ஸ்கோர் செய்யும் 70 அல்லது 80 ரன்களோ. இல்லையெனில் அவர் வீசும் மூன்று பந்துகளோ ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிடும்.
எனவே இந்தியாவை யார் வேண்டுமானாலும் நாக்-அவுட் சுற்றில் அப்செட் செய்யலாம். நாக்-அவுட் நிலைகளில் அவர்களிடம் ‘பிளான் B’ எனவொன்று இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியா, நியூசிலாந்து அணியிடம் கடந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வி கண்ட நாக்-அவுட் போட்டி அதற்கு ஒரு உதாரணம். இந்தியா கோப்பையை வெல்லும் என மக்கள் நினைப்பதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் அந்த அணியின் லைன்-அப் தான்” என தெரிவித்துள்ளார் நாசர் ஹுசைன்.
______________
நெதர்லாந்து வீரர் ஓய்வு அறிவிப்பு
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இதற்கிடையில், உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து அணி ஆல்-ரவுண்டர் ரியான் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரிடையராவதாக அறிவித்தார். ரியான் 2006-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரியான் 119 ரன்கள் குவித்தார். அதேபோல், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் குவித்தார். ரியான் டென் டெஸ்ஜெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,541 ரன்கள் குவித்துள்ளார்.
____________
நரைன் இல்லாதது... பொலார்ட் வருத்தம்
ஐபிஎல் 2021 போட்டியில் 14 ஆட்டங்களில் 62 ரன்கள் எடுத்த சுநீல் நரைன், பந்துவீச்சில் 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.44. எனினும் டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நரைன் இடம்பெறவில்லை. ஐபிஎல், சிபிஎல் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தாலும் 2019-லிருந்து சர்வதேச டி20 ஆட்டங்களில் நரைன் விளையாடவில்லை. நாங்கள் எதிர்பார்த்த உடற்தகுதி நரைனிடம் இல்லை என தேர்வுக்குழுத் தலைவர் ரோஜர் ஹார்ப்பர் விளக்கம் அளித்தார்.
டி20 உலகக் கோப்பை அணியில் நரைன் இல்லாதது பற்றி கேப்டன் பொலார்ட் கூறியதாவது., சுனில் நரைனைப் பொறுத்தவரை அவர் அணியில் இல்லாதது இழப்புதான். ஐபிஎல், சிபில் என டி20 கிரிக்கெட்டில் அவருடைய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். எனவே அவர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என ஒப்புக்கொள்கிறோம். அவர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். இந்த நேரத்தில் அது துரதிர்ஷ்டவசமானதுதான். அணியில் உள்ள 15 வீரர்களைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.
_____________
ஆஸ்திரேலிய அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஏழு பேட்டர்கள் இடம்பெறுவார்கள் என்று கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று நேற்று முதல் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பற்றி ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் கூறியதாவது.,
ஏழு பேட்டர்கள், 4 பிரதான பந்துவீச்சாளர்களுடன் நாங்கள் களமிறங்குகிறோம். மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மார்ஷ் ஆகிய மூவரும் இணைந்து நான்கு ஓவர்களை வீசி முடிப்பார்கள் என்கிற நம்பிக்கை உண்டு. ஐக்கிய அரபு அமீரக ஆடுகளத்தில் அவர்கள் நன்றாகப் பந்துவீசுவார்கள் என நம்புகிறோம். டேவிட் வார்னரின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நிச்சயம் மீண்டும் ரன்கள் குவிப்பார் என அவர் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.