எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது பணியின் தாக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். “வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது அதிவிரைவாக நடைபெறும் ஆட்டம் என்பதால் டோனி, டிரஸ்சிங் ரூமில் வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவலாம். அதே நேரத்தில் அணிக்கு தேவைப்படும் போது கள வியூகங்களையும் அவர் அமைத்துக் கொடுக்கலாம்.
டைம்-அவுட்டின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்புள்ளது. மற்றபடி ஆட்டத்தின் அழுத்தம் தொடங்கி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு களத்தில் நிற்கும் வீரர்கள் தான். டோனியை இந்த பணிக்கு நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே போல நாக்-அவுட் நிலைகளில் சரியான ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டும். அதை செய்ய தவறினால் பாதகமாக அமையலாம். மேலும் முதலில் பேட் செய்ய வேண்டியதும் அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
_____________
எதுவும் நடக்கலாம்: இங்கி. வீரர் ஹூசைன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவிக்கையில்., இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கலாம். ஆனால் டி-20 பார்மெட் கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் பேவரைட் அணி என என்னால் சொல்ல முடியாது. தனியொரு வீரரின் ஆட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். அந்த வீரர் ஸ்கோர் செய்யும் 70 அல்லது 80 ரன்களோ. இல்லையெனில் அவர் வீசும் மூன்று பந்துகளோ ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிடும்.
எனவே இந்தியாவை யார் வேண்டுமானாலும் நாக்-அவுட் சுற்றில் அப்செட் செய்யலாம். நாக்-அவுட் நிலைகளில் அவர்களிடம் ‘பிளான் B’ எனவொன்று இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியா, நியூசிலாந்து அணியிடம் கடந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வி கண்ட நாக்-அவுட் போட்டி அதற்கு ஒரு உதாரணம். இந்தியா கோப்பையை வெல்லும் என மக்கள் நினைப்பதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் அந்த அணியின் லைன்-அப் தான்” என தெரிவித்துள்ளார் நாசர் ஹுசைன்.
______________
நெதர்லாந்து வீரர் ஓய்வு அறிவிப்பு
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இதற்கிடையில், உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து அணி ஆல்-ரவுண்டர் ரியான் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரிடையராவதாக அறிவித்தார். ரியான் 2006-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரியான் 119 ரன்கள் குவித்தார். அதேபோல், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் குவித்தார். ரியான் டென் டெஸ்ஜெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,541 ரன்கள் குவித்துள்ளார்.
____________
நரைன் இல்லாதது... பொலார்ட் வருத்தம்
ஐபிஎல் 2021 போட்டியில் 14 ஆட்டங்களில் 62 ரன்கள் எடுத்த சுநீல் நரைன், பந்துவீச்சில் 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.44. எனினும் டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நரைன் இடம்பெறவில்லை. ஐபிஎல், சிபிஎல் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தாலும் 2019-லிருந்து சர்வதேச டி20 ஆட்டங்களில் நரைன் விளையாடவில்லை. நாங்கள் எதிர்பார்த்த உடற்தகுதி நரைனிடம் இல்லை என தேர்வுக்குழுத் தலைவர் ரோஜர் ஹார்ப்பர் விளக்கம் அளித்தார்.
டி20 உலகக் கோப்பை அணியில் நரைன் இல்லாதது பற்றி கேப்டன் பொலார்ட் கூறியதாவது., சுனில் நரைனைப் பொறுத்தவரை அவர் அணியில் இல்லாதது இழப்புதான். ஐபிஎல், சிபில் என டி20 கிரிக்கெட்டில் அவருடைய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். எனவே அவர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என ஒப்புக்கொள்கிறோம். அவர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். இந்த நேரத்தில் அது துரதிர்ஷ்டவசமானதுதான். அணியில் உள்ள 15 வீரர்களைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.
_____________
ஆஸ்திரேலிய அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஏழு பேட்டர்கள் இடம்பெறுவார்கள் என்று கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று நேற்று முதல் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பற்றி ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் கூறியதாவது.,
ஏழு பேட்டர்கள், 4 பிரதான பந்துவீச்சாளர்களுடன் நாங்கள் களமிறங்குகிறோம். மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மார்ஷ் ஆகிய மூவரும் இணைந்து நான்கு ஓவர்களை வீசி முடிப்பார்கள் என்கிற நம்பிக்கை உண்டு. ஐக்கிய அரபு அமீரக ஆடுகளத்தில் அவர்கள் நன்றாகப் பந்துவீசுவார்கள் என நம்புகிறோம். டேவிட் வார்னரின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நிச்சயம் மீண்டும் ரன்கள் குவிப்பார் என அவர் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.