எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம் என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்புக்குழு ஓரிரு நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணி தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணையின்போது, மனுதாரர் ஜோ ஜோசப்பின் வக்கீல் வில்ஸ் மேத்யூ ஆஜரானார். கேரளத்தில் கடந்த வாரம் பெய்த மழையால், நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் 50 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அணையில் எவ்வளவு நீரை தேக்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்பு குழுவிடம் கேட்டு தெரிவிக்கப்படும் என வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், மனுதாரர்களின் கவலையை புரிந்து கொண்டு, இந்த விவகாரத்தில் கண்காணிப்புக் குழு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.பிரகாஷ், மாநிலத்தில் நிலவும் பருவ மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவை போல, முல்லைப்பெரியாறு அணையில் நீரை 139 அடி வரை தேக்கி வைக்க தமிழக அரசுக்கு இந்த முறையும் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி. கிருஷ்ணமூர்த்தி, இன்று (நேற்று) காலை 9 மணி நிலவரப்படி அணையில் நீர் இருப்பு 137.2 அடியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என வாதிட்டார். அப்போது கேரள அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை தற்போதுள்ள நீரின் அளவை தொடர்ந்து இருக்கச் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி, அணைக்கான நீர்வரத்தை விட திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாகவுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, இடுக்கி மாவட்டத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்வது குறைந்த அளவே சாத்தியமாக உள்ளது. அணையில் நீரை திறந்துவிடுவது குறித்து கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கூறியதாவது., இந்த விவகாரத்தை கோர்ட்டில் விவாதிப்பதை விட, இதில் தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக ஆக்கப்பூர்வமாக கலந்து ஆலோசிக்க வேண்டும். அனைத்தையும் விவாதிக்க கோர்ட்டு அரசியல் மேடையல்ல. இது மக்களின் உயிர்கள் தொடர்புடைய விவகாரம். தற்போது நிலவும் பருவமழையை கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரை தேக்கி வைக்கலாம் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு குழுவிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஓரிரு நாட்களில் கண்காணிப்பு குழு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.