எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. வருகிற 7-ம் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிகிறது. பின்னர் இந்திய அணி தென் ஆப்பிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்குகிறது. ஜனவரி 26-ந் தேதி வரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது. முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் 17-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது என்றார்.
___________
ஆஷஸ் டெஸ்ட் தொடர்:
ஆஸி. அணிக்கு புதிய கீப்பர்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது.
இந்நிலையில் ஆஷஸ் தொடரில் முதல் இரு டெஸ்டுகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். 30 வயது அலெக்ஸ் கேரி, ஆஸ்திரேலிய அணிக்காக 45 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸி. ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் ஆரோன் ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டபோது ஆஸி. அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.
_____________
சீனாவில் அனைத்து டென்னிஸ்
போட்டிகளும் ரத்து - டபிள்யூடிஏ
சீன ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகா் ஜாங் காவ்லி, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் கடந்த மாத தொடக்கத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பதிவு நீக்கப்பட்டது. அதன் பிறகு பெங் ஷுவாய் வெளியுலகத் தொடா்பில் இல்லாத நிலையில் இருந்தார். அவரைத் தொடா்பு கொள்ள முடியாத நிலையும் இருந்தது. வெளியுலகம் கேள்வி எழுப்பியதை அடுத்து பெங் ஷுவாய் பாதுகாப்பாக இருப்பதாக சீன அரசு ஊடகம் பதில் தெரிவித்தாலும், அதைப் பல்வேறு தரப்பினரும் ஏற்கவில்லை.
35 வயது பெங் ஷுவாய், 2014-ல் இரட்டையர் தரவரிசையில் நெ.1 வீராங்கனையாகத் திகழ்ந்தவர். இந்த உயரத்தை அடைந்த முதல் சீன வீராங்கனை. இரட்டையர் பிரிவில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் ஹாங்காங் உள்பட சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து டபிள்யூடிஏ போட்டிகளையும் ரத்து செய்வதாக மகளிர் டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. டபிள்யூடிஏ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் சைமன், இந்த நடவடிக்கை குறித்து அளித்த விளக்கத்தில்., பெங் ஷுவாயால் சுதந்திரமாகப் பேச முடியாமல், பாலியல் குற்றச்சாட்டை மறுத்துக் கூறும்படியான அழுத்தம் உள்ள நிலையில் இதர வீராங்கனைகளை எப்படி சீனாவுக்கு அனுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
____________
ஐ.பி.எல்.லில் சம்பள உயர்வு
பெற்ற வெங்கடேஷ் ஐயர் !
ஐ.பி.எல் 2022 போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ. 8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டிருப்பதால் தற்போது தக்கவைக்கப்பட்ட வீரர்களில் அதிக மடங்கு சம்பள உயர்வு பெற்ற வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2021 ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி தேர்வு செய்தது. இப்போது 40 மடங்கு சம்பள உயர்வு. இதற்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கேவின் ருதுராஜ். 30 மடங்கு சம்பள உயர்வுடன் ரூ. 6 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
____________
ஐ.பி.எல்.லில் ஒரே அணிக்காக
9 முறை தக்கவைக்கப்பட்ட வீரர்
ஐ.பி.எல் போட்டியில் பங்குபெறும் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் சம்பளம் முதல்முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்கு ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல் தேர்வானார். இம்முறை குறைந்த சம்பளத்துடன் ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். 2012-ல் ஐ.பி.எல் போட்டியில் அறிமுகம் ஆனார் மேக்ஸ்வெல். டிராவிஸ் பர்ட்-டுக்குப் பதிலாக தில்லி அணியில் 20,000 அமெரிக்க டாலருக்குத் தேர்வானார். இந்த வருட ஏலத்தில் பெரிய தொகைக்கு ஆர்சிபி அணியில் தேர்வானார் மேக்ஸ்வெல். தன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கும் விதமாகச் சிறப்பாக விளையாடினார். 15 ஆட்டங்களில் 6 அரை சதங்களுடன் 513 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். எகானமி - ரூ. 144.
இதனால் இந்த வருடம் மேக்ஸ்வெல்லைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆர்சிபி அணி. ஆனால் இதன் காரணமாக மேக்ஸ்வெல்லின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. கோலிக்கு ரூ. 15 கோடி தரவேண்டியிருப்பதால் மேக்ஸ்வெல்லுக்கு ரூ. 11 கோடியும் சிராஜுக்கு ரூ. 7 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு முறையும் அதிகச் சம்பளம் பெற்று வந்தார் மேக்ஸ்வெல். அதிலும் கடந்த ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்குத் தேர்வாகி ஆச்சர்யப்படுத்தினார். இம்முறை ஆர்சிபி அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ. 11 கோடி என குறைந்த சம்பளத்தில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார்.
___________
தென் ஆப்பிர்கா சுற்றுப்பயணம்:
இந்திய 'ஏ' அணி அபார ஆட்டம்
குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.
2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 2-வது நாளில் தென்னாப்பிரிக்க ஏ அணியை 297 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது இந்திய ஏ அணி. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 59 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.
______________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மடப்புரம் கோவில் காவலாளி மரணம்: த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
07 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.