முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா: ஒமைக்ரான் பாதிப்பா என பரிசோதனை?

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த நாகர்கோவில் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்துள்ளதா என்பதை அறிய ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ஓமைக்ரான் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து