எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யிடம் கடன் தவணை சலுகைத் திட்டங்கள் குறித்து இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பேச்சுவாா்த்தை நடத்தினார்.
கொரோனா பாதிப்பால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனாவிடம் ஏராளமாக கடன் வாங்கியுள்ள இலங்கை, நிகழாண்டில் 200 கோடி டாலா் (சுமாா் ரூ. 14,855 கோடி) வரை கடன் தொகையை திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், இலங்கை-சீனா இடையிலான தூதரக உறவு தொடங்கியதன் 65-ஆவது ஆண்டையொட்டி, இரு நாள் பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி நேற்று முன்தினம் இலங்கை வந்தார். அவருக்கும், அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கும் இடையிலான சந்திப்பு அதிபா் மாளிகையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பை தொடா்ந்து, அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏற்கெனவே பொருளாதார பிரச்னையால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை சலுகைத் திட்டங்களை சீனா அறிவித்தால் இலங்கைக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சரிடம் அதிபா் கோத்தபய வேண்டுகோள் வைத்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி சலுகை வா்த்தக கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், நாட்டில் தொழிற்சாலைகளை சுமுகமாக நடத்துவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்தச் சந்திப்பின்போது அதிபா் கோத்தபய கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


