எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலையில் மதுரை தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவில், அழகர்கோவில், கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் கோவில், சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலையில்5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக சர்வ அலங்காரத்துடன் பெருமாள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திராளன பக்தர்கள் சொர்க்கவாசல் முன்பு நின்று பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம் ஆனால் கொரோனா பாதிப்புகளை தடுப்பதற்காக தமிழக அரசின் அறிவுறுத்தல் படி அதிகாலையில் பகதர்களுக்கு அனுமதி இல்லை . காலை 6மணிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.ஆண்கள்.பெண்கள்.முதியவர்கள்.குழந்தைகள் என முக கவசம் அணிந்து சமுக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள். சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் போது சொர்க்க வாசலில் படிகளை தொட்டு வணங்கி வந்தார்கள். முரன் என்ற மிகப்பெரிய அரக்கன். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தார். அவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் அரக்கனுடன் போரிட்டார். ஆனால் அவன் பல மாய வடிவங்களில் தோன்றி போர் புரிந்து வந்தான். ஒருநாள் ஒரு குகையில் சென்று ஓய்வு எடுக்க பெருமாள் சென்றார். இதைப் பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன் என்ற மிகப்பெரிய அரக்கன் பெருமாலை தாக்குவதற்கு வருகிறான். அப்போது திருமாலின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி பெண் வடிவமாக மாறி அரக்கனுடன் போரிட்டு வென்றார். இதை பார்த்த திருமால் மனம் மகிழ்ந்தார். அசுரனை அழித்த அந்த சக்தி பெண்ணுக்கு ஏகாதசி என பெயர் சூட்டினார். அன்றைய நாள் ஏகாதசி இருந்ததால் அந்த பெண்ணுக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன் என்று வரம் அளித்தார். இதனால் இந்த தினத்தை வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகச்சிறப்பாக இன்று கொண்டாடப்படுகிறது. இதன்படி பக்தர்கள் ஏராளமானோர் கண்விழித்து வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்வோர் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது ஐதீகம். இதன்படி ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். மேலும் நேற்று ஏகாதசியை முன்னிட்டு மதுரையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் இன்று அதிகாலையே திறக்கப்பட்டது. அப்போது சொர்க்கவாசல் வழியாக பெருமாள் சர்வ அலங்காரத்துடன் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தல்லாகுளம்
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று 4.50 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் வந்தார். அப்போது சொர்க்கவாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள் கோவிலை சுற்றி மீண்டும் கோவிலுக்குள் சென்றார்.
அழகர்கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் முதல் பகல் பத்து உற்சவ திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.15 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாள் செர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டபத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது.தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தரராச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த இந்த விழாவில்காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர.கொட்டும் பனியையும், பொருட்படுத்தாமல் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த