எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் புதிய ஆயுஷ் மருந்துகளைப் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் ஆகிய பெருந்தொற்றிலிருந்து நம்மைப் பாதுக்காக உடலில் சிறந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பது அவசியம். அதற்காக ஆயுஷ் அமைச்சகம் புதிய மருந்துகளை அறிவித்துள்ளது.
இது குறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் பிரமோத் குமார் பதக் அளித்த பேட்டியில், "கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நோய் வந்தால் அதிலிருந்து குணமடையவும் ஆயுஷ் அமைச்சகம் மருந்துகளைப் பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில் நோய் எதிர்ப்புச்சக்தி திறனை அதிகப்படுத்த ஆயுஷ் 64 மற்றும் கபசுர குடிநீர் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆயுஷ்64 மருந்து திறன்மிக்கது என்பதைக் கண்டறிய 7 விதமான கிளினிக்கல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் நாள்தோறும் இரு வேளை சாப்பிடக்கூடிய 500எம்ஜி கொண்ட இரு மாத்திரைகள், 3 வேளை சாப்பிடக்கூடிய 500எம்ஜி கொண்ட 3 மாத்திரைகள் இருக்கின்றன. இந்த மாத்திரைகளை கொரோனா பாதிப்பு லேசான அறிகுறிகள் இருப்போருக்கும் பயன்படுத்தலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த 3 விதமான மருந்துகளைப் பரிந்துரை செய்கிறோம். முதலில் ஆயுராக்ஸா கிட் இதில் தினசரி 6 கிராம் சாப்பிடக்கூடிய சவன்பிராஷ் லேகியம், தினசரி 75மில்லி குடிக்கக்கூடிய ஆயுஷ் காவத், இரு வேளை சாப்பிடக்கூடிய சம்ஸாமணி வாதி 500 எம்ஜி, தினசரி மூக்கில் சில சொட்டுகள் விடக்கூடிய அனு தைலம் ஆகியவை இருக்கும்.
இரண்டாவதாக குட்சி ஞானவதி 500எம்ஜி மாத்திரைகள் நாள்தோறும் இரு மாத்திரைகள், 3வதாக அஸ்வகந்தா மாத்திரைகள் நாள்தோறும் இரண்டு சாப்பிட வேண்டும். ஆயுஷ் மருந்துகல் கொரோனா வரமால் தடுக்க நோய் எதிர்ப்புச் சக்தியையும், வந்தாலும் அதிலிருந்து விரைவாகமீள மருந்துகளையும் பரிந்துரைக்கிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடலில் சிறந்த அளவு நோய் எதிர்ப்புச்சக்தி அவசியம்" என்று பிரமோத் குமார் பதக் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


