திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் தேசிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கி வைத்தார். கோவிஷீல்டு, கோவேக் சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்ததாக பிப்ரவரி 2-ம் தேதி முதல் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
மார்ச் 1-ம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணைய நோயுடன் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பின்னர் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பூசி நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. முன் எச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. கடந்த 10-ம் தேதியில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 5 மாநில சட்டசபை தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள், இணை நோய்களுடன் இருக்கும் 60 வயது முதியவர்கள் ஆகியோருக்கு முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நேற்று முன்தினத்துடன் ஒரு ஆண்டு முடிந்துள்ளது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 93 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியையும், 69.8 சத வீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர். 43.19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன் எச்சரிக்கை (பூஸ்டர்) தவணை செலுத்திக் கொண்டனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 3.38 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்ட 13 தினங்களில் 45 சதவீத பேருக்கு முதல் தவணை கோவேக்சின் செலுத்தப்பட்டு உள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மாத இறுதியில் முடிவடையும். மொத்தம் 7.4 கோடி சிறுவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இதன் 2-வது தவணை தடுப்பூசி இந்த மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என்று கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.,
ஜனவரி இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 7.4 கோடி சிறுவர்களுக்கு முதல் டோஸ் செலுத்த இலக்கு வைத்துள்ளோம். பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். பிப்ரவரி இறுதிக்குள் அதை முடிக்க திட்டமிட்டுள்ளோம். 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும். இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று ஒன்றிணைந்து தொற்று நோயை பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய குழந்தை மருத்துவ அகடாமி முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, ‘குழந்தைகளுக்கான தடுப்பூசி வரம்பை உயர்த்துவது வரவேற்கத்தக்கதாகும். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிப்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 20-05-2022
20 May 2022 -
உதகையில் 124-வது மலர் கண்காட்சி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 May 2022உதகை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.
-
தி.மு.க. அரசின் நிர்வாக நடவடிக்கையால் உணவுத்துறையில் ரூ. 2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்
20 May 2022சென்னை : தி.மு.க.
-
ரேசன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
20 May 2022சென்னை : தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
19 May 2022மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
-
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது
20 May 2022அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை எட்டி உதைக்கும் அதிகாரி : வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
20 May 2022ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அதி
-
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்பு
20 May 2022தஞ்சாவூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
-
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் 5 ஜி அலைவரிசையை சோதித்து பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி
20 May 2022சென்னை : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 5 ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.
-
சென்னை குடிநீர் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ்.கோரிக்கை
20 May 2022சென்னை : பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ
-
கோவை, திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து நாளை முதல் 15 நாட்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் : லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
20 May 2022திருப்பூர் : நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 22-ந் தேதி (நாளை) முதல் ஜூன் 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கோவை, திருப்பூர் ம
-
எம்.ஜி.ஆர். படப்பாடலுடன் முதல்வரை வரவேற்ற பேண்ட் வாத்திய குழுவினர்
20 May 2022நீலகிரி : உதகையில் மலர் கண்காட்சியை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
அயோத்தி தாசர் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
20 May 2022சென்னை : அயோத்தி தாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் தாயகம் திரும்பினர்
20 May 2022மீனம்பாக்கம் : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை திரும்பினர்.
-
மதுரை உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
20 May 2022மதுரை, ராமேஸ்வரம் உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
நெல்லையில் 6-வது நாளாக நீடித்த மீட்பு பணிகள்: கல்குவாரி விபத்தில் தேடப்பட்ட உரிமையாளர்கள் 2 பேர் கைது
20 May 2022நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் : சென்னையில் மத்திய அமைச்சர் பேட்டி
20 May 2022சென்னை : தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: திருச்சி உள்ளிட்ட 9 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
20 May 2022சென்னை : கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் காவிரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்ட கலெக்டர்கள் மு
-
நாமக்கல்லில் 3 மையங்களில் பிடிபட்ட 5 கிலோ பிட் பேப்பர்: அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் பணியிலிருந்து நீக்கம் : தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை
20 May 2022நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில் 5 கிலோ பிட் பேப்பர் பிடிப்பட்டதை தொடர்ந்து தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்
-
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு ஸ்டாலின் பாராட்டு
20 May 2022சென்னை : உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை நிகாத் சரீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்
20 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்
20 May 2022சென்னை : முதியோர்களுக்கான ரயில் கட்டணச்சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவ
-
போலி மதுவை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இ.பி.எஸ்.
20 May 2022சென்னை : தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
-
தமிழகத்தில் இன்று குரூப்-2 தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
20 May 2022சென்னை : தமிழகத்தில் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
-
இங்கிலாந்தில் அபூர்வ நிகழ்வாக இந்த வாரம் இரத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
20 May 2022இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.