முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணாமல் போன அருணாச்சல் சிறுவனை இந்தியா கொண்டு வர அரசு நடவடிக்கை

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைப் பகுதியில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து விட்டோம் என அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டம் லங்டா ஜார் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மிரம் தரோன், கடந்த 18-ம் தேதி மாயமானார். அவரை சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றதாக மாநில பாஜக எம்.பி.யான தாபிர் காவ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சீன ராணுவத்தை தொடர்பு கொண்ட இந்திய ராணுவத்தினர், மாயமான சிறுவன் மிரம் தரோனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டனர். எனினும், சிறுவன் கடத்தப்பட்டானா என்பதற்கு இந்திய ராணுவத் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், மாயமான சிறுவன் மிரம் தரோனை கண்டுபிடித்து விட்டதாக சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த சிறுவனை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து