முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் லேபிள் ஒட்டும் வேலை : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

Source: provided

திருச்சி : கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலை தான் தி.மு.க. ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று மூன்றாவது நாளாக திருச்சி கண்டோன்மெண்ட்காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, 

அ.தி.மு.க. தொண்டர்களின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினர் எதையும் செய்வார்கள். தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் வலியுறுத்துவார்கள். ஆனால் இங்கே மு.க. ஸ்டாலின் கவர்னரை போய் சந்திப்பார்.  தி.மு.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

வழக்கம்போல் பட்ஜெட்டில் அல்வா தான் கொடுத்துள்ளார்கள்.  கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலை தான் தி.மு.க. ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து