எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிருப்தி தலைவர்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு எதிரொலியால், காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வருமா என் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி பதவி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் கட்சி மேலிடம் மீது அதிருப்தி அடைந்தனர். அவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நேரு குடும்பத்தை சேராத வேறு ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு நெருக்கமான பிருத்விராஜ் சவான், அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடே, ராஜ்பப்பர், மணிசங்கர் அய்யர், குரியன், குல்தீப்சர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் கூறும்போது அனைத்து மாநிலத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கூட்டுத் தலைமையை பின்பற்றுவதே காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி எடுத்து செல்லும் ஒரே வழி என அவர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியிடம் விளக்கி கூறினார்.
இந்த சூழ்நிலையில் அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த பூபிந்தர்சிங் ஹூடாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் மறுசீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பூபிந்தர்சிங் ஹூடா, குலாம்நபி ஆசாத் மற்றும் அனந்த்சர்மா, கபில் சிபல் ஆகியோரை சந்தித்து ராகுல் காந்தியிடம் பேசியது குறித்து விவாதித்தார்.
இப்படி காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த சம்பவங்களுக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் குறித்து ஆராய 5 மூத்த தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்துக்கு ஜிதேந்தர்சிங்கும், உத்தரகாண்ட்டில் அவுனாஷ் பண்டேகரும், கோவாவுக்கு ரஜனி பாட்டிலும், மணிப்பூருக்கு ஜெய்ராம் ரமேஷ், பஞ்சாப்புக்கு அஜய் மக்கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாநிலங்களில் அமைப்பு ரீதியான மாற்றங்களை செய்யுமாறு சோனியா காந்தி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லியில் சோனியா காந்தி சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து கேட்டறிந்தார். அதற்கு எம்.பி.க்கள் உள்கட்சி பிரச்சினையாலும், தலைவர்களின் ஒழுங்கீனமான செயல்களாலும் இந்த தோல்வி ஏற்பட்டதாக கூறினார்கள். உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனித்தனியாக சந்தித்து பேசினார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது ஏன் என்பது குறித்து அவர் எல்லோரிடமும் கேட்டறிந்தார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலை பொறுத்தவரை 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தோல்வி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சூழ்நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி தலைவர்களையும் சந்திக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார். அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், நேற்று சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது அவர் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், தாங்கள் எடுத்துள்ள பரிந்துரைகள் குறித்தும் விளக்க உள்ளார். இதனால் விரைவில் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்
29 Oct 2025வாஷிங்டன் : 300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல் குறித்து உசேன் போல்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி
29 Oct 2025டெல்லி : டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வியடைந்தது.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.


