முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வெளியுறவு துறை புதிய செயலராக குவாத்ரா பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
Quadra 2022-05-01

Source: provided

புது டெல்லி, : இந்திய வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

1988-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ் அதிகாரியான குவாத்ரா கடந்த ஜனவரி 2020 முதல் காத்மண்டுவில் தூதராக இருந்து வருகிறார். குவாத்ராவை வெளியுறவுத் துறை புதிய செயலராக கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மத்திய அரசு நியமித்தது. இவருடைய நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.

இதற்கு முன்பு வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலராக குவாத்ரா இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து